சேலம், ஜன.5- ஏற்காடு பகுதி மக்க ளுக்கு பட்டா மற்றும் அடிப் படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் பேரணி யாக சென்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஏற் காடு பகுதியில் லாங்கில் பேட்டை, ஜெரினாக்காடு, முருகன் நகர், பட்டிப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டா இல்லாமல் மக்கள் குடியிருந்து வருகின்ற னர். உடனடியாக அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் முழு மையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. அவற்றை உடனடியாக அமைத்து தர வேண்டும். ஏற்காடு ஏரியை தூய்மைப் படுத்தி, கழிவுநீர் கலக்காத வண்ணம் அழகு படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்காடு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் ஏற் காடு தாலுகா செயலாளர் நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், தாலுகாக்குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஏற்காடு பேருந்து நிலையத் திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று ஏற்காடு வட்டாட்சியரி டம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதைய டுத்து மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சி யர் மேற்கண்ட பிரச்சனை குறித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.