districts

தனியார் மூலம் நடத்தப்படும் மூன்றாவது குடிநீர் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், நவ. 24 – புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத் தின் ரூ.155.90 கோடி கடனை கட்டுவதற்கு, டுபிட்கோ நிறுவனத்திடம் ரூ.90 கோடி கடன்  வாங்குவதை திருப்பூர் மாநகராட்சி நிர்வா கம் கைவிட வேண்டும். மாநகராட்சி தர வேண் டிய கடனை தமிழக அரசு ரத்து செய்து, மூன் றாவது குடிநீர் திட்டத்தை கையகப்படுத்தி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மக்களுக்கு  குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழுக் கூட்டம் செவ்வாயன்று திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெய பால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கே.கனகராஜ், ஜி.சுகுமாறன், மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச்  செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம்: 

திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் கடந்த நவ. 16ஆம் தேதி புதன்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில் மூன்றாவது குடிநீர்  திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டத்தை  செயல்படுத்தும் புதுத்திருப்பூர் பகுதி மேம் பாட்டுக் கழகத்திற்கு செலுத்த வேண்டிய நிலு வைக் கட்டணம் மற்றும் அதற்கான வட்டி  தொகை சேர்த்து மொத்தம் ரூ.155 கோடியே  90 லட்சம் செலுத்த வேண்டும். அதற்காக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட் டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ) என்ற அரசுசார் நிதி நிறுவனத்திடம் ரூ.90 கோடி கடன் வாங்கி புதுத்திருப்பூர் பகுதி  மேம்பாட்டுக் கழதத்தின் கடனை அடைப் பது என்றும், டுபிட்கோ கடன் ரூ.90 கோடியை  வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.123.90 கோடியை 10 ஆண்டுகளில் 40 தவணையாக  செலுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பைத்  தெரிவித்துக் கொள்கிறது

ஆரம்பத்திலேயே எதிர்ப்பு:

புதுத் திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம்  மூலம் மூன்றாவது குடிநீர் திட்டம் அறிமுகப் படுத்தியபோதே, தனியார் மூலம் வர்த்தக  நோக்கத்தில் நிறைவேற்றினால் மக்களுக்கு  கட்டணச் சுமை ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. மாநக ராட்சி மூலம் நேரடியாக குடிநீர் திட்டத்தை அமலாக்கி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண் டும் என மிகப்பெரும் பிரச்சாரம், போராட்ட இயக்கம் நடத்தப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் மூன்றாவது குடி நீர் திட்டத்தின் அனுபவம், மாநகராட்சிக்கும், இங்கு வாழும் மக்களுக்கும் மிகப்பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி வருவதை உறுதிப் படுத்தி உள்ளது. ஏற்கெனவே மக்களுக்குத் தேவையான சாலை, சாக்கடை, தெரு  விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பணம் இல் லாமல் மாநகராட்சி நிர்வாகம் நெருக்கடியில்  தவித்து வருகிறது. 

திவாலான நிறுவனம்:

ஏற்கெனவே திவாலாகும் நிலைக்குப் போன புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழ கத்திற்கு, கடந்த 2012ஆம் ஆண்டு அப்போ தைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீட்புத்  திட்டம் (பெயில் அவுட்) என்ற பெயரில் ரூ.105  கோடி மக்கள் பணத்தை அந்த நிறுவனத் திற்கு வழங்கினார். அத்துடன் மூன்றாவது குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு கடந்த 17  ஆண்டுகளில் திருப்பூர் மாநகராட்சி கட்ட ணமாக கொடுத்திருக்கும் தொகை மட்டும் தோராயமாக ரூ.1400 கோடி! 

மக்களுக்கு சுமை:

இந்த நிலையில் மக்களுக்கு செய்ய  வேண்டிய பணிகளைப் பற்றி அக்கறைப்படா மல் புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழ கத்துக்கு, பெரும் தொகையை கடனாக வாங்கி அடைக்க முயற்சிப்பது மக்கள் நல னைப் புறக்கணிக்கும் அநீதியாகும். இப் போது மாநகராட்சி செலுத்த வேண்டிய நிலு வைக் கட்டணத்திற்கு இந்நிறுவனம் விதிக் கும் வரி 20 சதவிகிதம் என்பது, கந்துவட்டிக் காரர்கள் வசூலிக்கும் வட்டி விகிதம் போல உள்ளது. கடன் வாங்கி கடனை கட்டுவது என்ற நிலை திருப்பூர் மாநகர மக்கள்  தலையில் மேலும் சுமைகளை ஏற்றக்கூடிய நடவடிக்கையே ஆகும். மூன்றாவது குடிநீர் திட்டம் மாநகராட் சிக்கு மிகப்பெரும் கடன்சுமையை ஏற்படுத் துவதுடன், தேவையான தண்ணீரையும் பெற  முடியாத நிலையில்தான், திருப்பூர் நான்கா வது குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தின் மூலம் நிறைவேற்ற முடிவு  செய்து, தற்போது கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருவது கவனிக்கத்தக்கது. 

கடும் நிபந்தனை:

மேலும் ரூ.90 கோடி வழங்கும் டுபிட்கோ  நிறுவனத்தின் கடன் நிபந்தனைகளில், மாநக ராட்சி பட்ஜெட்டில் இந்த கடனை அடைப்பதற் கான வழிவகைகளை உருவாக்க வேண்டும்.  அரசு வழங்கும் மானியம் உள்ளிட்ட இதர நிதி கள் கிடைத்தாலும் இந்த கடனை செலுத்து வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். சொத்து வரி, தொழில் வரிகளை உயர்த்த முடி யாவிட்டாலும், நிதி நெருக்கடியில் இருந்தா லும் டுபிட்கோ கடனை கட்டாயம் செலுத்த  வேண்டும் என மிகக்கடுமையான நிபந்தனை கள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது சொத்து வரி, தொழில் வரி,  காலியிட வரி உயர்த்தப்பட்டிருக்கும் நிலை யில், இதன் மூலம் கிடைக்கும் வருவாயும் கடனை அடைக்கவே பயன்படுத்தப்படும் என் பதோடு, மென்மேலும் வரிகள் உயர்த்தப்ப டும் என்ற அச்சுறுத்தலும், மக்களுக்கான அடிப்படைப் பணிகள் செய்வதற்கு முன்னு ரிமை அளிக்கப்படாது என்பதும் தெளிவாகி றது. ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு  முறை சராசரியாக ரூ.3 கோடி வீதம் மாந கராட்சி பணம் டுபிட்கோ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 

தீராத அவலம்:

தண்ணீர் வணிகமயத்தினால் திருப்பூர் மக்களின் குடிநீர் தேவை தீரவில்லை. லாப  நோக்கத்தில் கணக்குப் போட்டு காசு பறிக் கும் வேலைதான் தொடர்ந்து கொண்டிருக் கிறது. இன்றும் பத்து, பதினைந்து நாட்க ளுக்கு ஒரு முறைதான் குடிநீர் கிடைக்கும்  என்ற நிலை திருப்பூர் மாநகரின் பல பகுதிக ளிலும் உள்ளது. இந்த திட்டத்திற்கு கூடுதல்  கட்டணம் செலுத்துவது போக, குடிநீருக்காக  மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் ஒரு பகு தியை செலவிட்டு கேன் குடிநீர் வாங்கி பயன்ப டுத்தும் நிலையில் திருப்பூர் மக்கள் உள்ள னர். 

கடனை ரத்து செய்:

எனவே தற்போதைய சூழலில் புதுத்திருப் பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்திற்கு மாநக ராட்சி செலுத்த வேண்டிய மொத்த கடனை யும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண் டும். இதன்மூலம் கடன் வாங்கிக் கழித்தல் என  அடுத்த 10 ஆண்டுகளுக்கு டுபிட்கோ நிறுவ னத்திற்கு கடன் செலுத்தும் சுமையை அரசு  கைவிட வேண்டும். புதுத் திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத் தின் திட்டம் குறித்து தமிழக அரசு முழுமை யான மறுபரிசீலனை செய்து, ஒட்டுமொத்த குடிநீர் திட்டங்களையும் கையகப்படுத்தி குடி நீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்பு கள் மூலம் மக்களுக்கு நியாயமான கட்ட ணத்தில் குடிநீர் விநியோகம் செய்ய வேண் டும். இதனால் மாநகராட்சிக்கு பெரும் நிதிச் சுமை, கடன் குறைவதுடன், மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை நன் றாகச் செய்ய முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சி  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.