districts

img

கள்ளச்சாராய சாவுகள்; நீட்தேர்வு முறைகேடுகளை கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டங்கள்

திருப்பூர், ஜூன் 22 - மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை  நாசப்படுத்தும் நீட் தேர்வு முறைகேடுகளை  கண்டித்து, விசாரணை நடத்தி குற்றவாளி களை தண்டிக்கக் கோரியும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரியும் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் த. ஆறுக்குட்டி தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழ கத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், மருத் துவ மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு  நடத்த அனுமதி வழங்க வேண்டும்,  நீட் தேர்வு  முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், சிஐடியு  சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலா ளர் பி.பாலன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.  தெற்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் நீட் தேர்வுக்கு எதிராகவும், நெல்லை யில் சாதி வெறியர்களால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்ட தைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவத் தைத் தடுக்கத் தவறிய அரசு நிர்வாகத்தைக்  கண்டித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர்  தெற்கு ஒன்றியக்குழு சார்பில் பெரியாண்டி பாளையத்தில் சனியன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர், கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் கே கணேசன்  தலைமை ஏற்றார். இதில் கட்சியின் மாநிலக்  குழு உறுப்பினர் கே காமராஜ், ஒன்றியச் செய லாளர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்  பா.லட்சுமி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் ஜி.சிந்தன் ஆகியோர் உரையாற்றினர். பெருந்திரளானோர் கலந்து கொண்ட இந்த  ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக ஈ.அங்குலட் சுமி நன்றி கூறினார். வடக்கு ஒன்றியம் பாண்டியன் நகர் பகுதியில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியக்குழு  உறுப்பினர் என்.இளங்கோ தலைமை ஏற் றார். கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எ.சிகாமனி, சந்தோஷ், மாணவர் சங்க  மாநிலத்தலைவர் சம்சீர் அகமத் ஆகியோர் கண்டன் உரையாற்றினர். இதில், மாதர் சங் கம், விவசாய சங்கம், வாலிபர் சங்கம் நிர்வாகி கள் பலர் பங்கேற்றனர். முடிவில் ஒன்றியக் குழு உறுப்பினர் கோபால் நன்றி கூறினார்.  காங்கேயம் காங்கேயம் நகர பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு காங்கேயம் நகர கிளைச் செய லாளர் ராமநாதன் தலைமை ஏற்றார்.  தாலுகா  செயலாளர் கே.திருவேங்கடசாமி, தாலுகா  குழு உறுப்பினர்கள் தங்கவேல், வேலுச் சாமி, போக்குவரத்து கிளை நாச்சிமுத்து ஆகி யோர் உரையாற்றினர். இறுதியாக காளியப் பன் நன்றியுரை கூறி முடித்து வைத்தார்.