districts

img

இடிந்து விழும் நிலையில் நடுநிலைப்பள்ளி உடனே சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், ஜூன் 6 – இடிந்து விழும் நிலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக் கட்டி டத்தை உடனே  சீரமைத்து தர வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் இரண்டாவது மண்டல அலுவலகத்தில் செவ்வாயன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. பி.என்.பாளையம் கிளை செயலா ளர் மனோகரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, 18 ஆவது வார்டு பி.என்.பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 70  வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பழைய கட்டிடத்தின்  ஒரு பகுதி மிகவும் பழுதடைந்துள்ளது. எந்த நிமிடமும் கீழே இடிந்து விழும் ஆபத்து உள்ளது. உடனடியாக புதிய  கட்டிடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு  வர வேண்டும். பள்ளி வீதியில் உள்ள தார்ச்சாலை நடக்கவே முடியாத அள விற்கு பழுதடைந்துள்ளது. குடிநீர் இணைப்புக்காகவும், பாதாளச் சாக் கடை பணிகளுக்காகவும் தோண்டப் பட்ட சாலைகள் முறையாக மூடப்பட வில்லை. இதனால் மக்கள் பெரிதும் சிர மத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே,  உடனடியாக தார்ச்சாலை அமைத்து தர  வேண்டும். மேலும், சாக்கடை கால் வாய் சிறியதாக உள்ளதால் மழை தண் ணீர் செல்ல வழி இல்லாமல் சாலை முழு வதும் சாக்கடை நீரும், மழை நீரும்  கலந்து குளம் போல தேங்கி நிற்கிறது. எனவே, உடனடியாக சாக்கடை கால் வாயை அகலப்படுத்தி கழிவு நீர் மற்றும்  மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண் டுள்ளனர். இதில் வடக்கு மாநகரக்குழு  உறுப்பினர் பா.ராஜேஷ் உள்பட மார்க் சிஸ்ட் கட்சி கிளை உறுப்பினர்கள் பங் கேற்றனர்.