districts

img

யாகபூஜைக்கு மாணவர்களை அழைத்து செல்வதா?

திருப்பூர், ஜன.20– உடுமலையில் எட்டு தனியார் பள்ளி நிர் வாகங்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும், மாணவர் களின் தன்னம்பிக்கை சீர்குலைக்கும் நோக் கத்தோடு, கோவிலுக்கு அழைத்துச் சென்று யாகபூஜை நடத்திய தனியார் பள்ளிகள் நிர் வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலைபேட்டை ஒன்றிய  செயலாளர் கி.கனகராஜ் வெள்ளியன்று  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ  ஆதார்ஸ் மெட்ரிக் பள்ளி, ஆர்விஜி மெட்ரிக் பள்ளி, ஜிவிஜி மெட்ரிக், விஏவி இன்டர்நேச னல் பள்ளி, ஸ்ரீனிவாசா பப்ளிக் பள்ளி உள் ளிட்ட எட்டு தனியார் பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை, பள்ளி நேரத்தில் உடுமலை திருப்பதி கோவி லுக்கு யாகபூஜைக்கு அழைத்துச் சென் றுள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பை கேள் விக்குறியாக்கி, தன்னம்பிக்கையை சீர்கு லைத்து  மூடநம்பிக்கைக்குள் தள்ளும் தனி யார் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள்  ஆசிரியர்கள் மீதும் கல்வி உரிமைச் சட்டப்படி தக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும். கல்வி கற்றுத் தரும் ஆசிரியப் பணியை இழிவுபடுத்தும் விதமாக எழுதுபொருட் களை பூஜித்தால் தேர்வில் வெற்றி பெறலாம் என மூட நம்பிக்கையை விதைத்து மாணவர்க ளின் ஒரு நாள் படிப்பை வீணடித்துள்ளனர். யாக பூஜைக்கு ஏற்பாடு செய்து பள்ளிகளில் இதை வலியுறுத்தி, தனியார் பள்ளி வாக னங்களை கோயிலுக்கு வரவழைத்தது, தமி ழக அரசின் மதச்சார்பற்ற நிலைபாட்டுக்கு எதி ரானது. அனைத்து மத நம்பிக்கையும் உள்ள  மாணவர்களை திட்டமிட்டு மனஉளைச்ச லுக்கு ஆளாக்கியுள்ள நடவடிக்கை மிக மோச மான முன்னுதாரணம்.

தமிழக அரசு உடனடி யாக தலையிட்டு மாணவர்களை அழைத்து வந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளார்.  முன்னதாக, தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், கல்வித்துறை உடனடியாக நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வாலிபர் சங்க உடுமலைப்பேட்டை ஒன் றிய செயலாளர் தமிழ் தென்றல் தலைமை தாங்கினார். இதில், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் ஓம் பிரகாஷ், முன் னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாண வர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் லோகேஷ் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.