districts

img

தருமபுரி நகராட்சியில் 16-ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருப்பூர், பிப்.9- திருப்பூர் மாநகராட்சி 1,9,28,53 ஆகிய வார்டுகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் ஆதரவுடன் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.  திருப்பூர் மாநகராட்சி 1 ஆவது வார்டில்  போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் ஜி.மீனாட்சி புதனன்று காலை அந்த வார்டுக்கு உட்பட்ட பிரியங்கா நகர் பகுதியில் வீடு, வீடாக பொதுமக்களை சந் தித்து ஆதரவு திரட்டினார். அவருடன் கூட் டணி கட்சியினர் பங்கேற்றனர். திருப்பூர் மாந கராட்சி 9 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கா.வசந்தி வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருடன் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். காளியப்பன், முன்னாள் செட்டிபாளை யம் ஊராட்சி மன்றதுணைத் தலைவர் ஜி.எம்.லோகநாதன், ராக்கிமுத்து உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். 28 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வீ.பாலசுப்பிரமணியம் கூட்டணிக் கட்சியின ருடன் மக்களை சந்தித்து ஆதரவு திரட் டினார். 53 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஆர்.மணிமேகலை கூட்டணிக் கட்சியி னர் படைசூழ அந்த வார்டு பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார்.