தருமபுரி, ஜன.21- அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பேத்கர் நக ருக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், அதனை சீர்செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சிக்குட்பட்டது அம்பேத்கர் நகர். இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அம்பேத்கர் நக ருக்கும், அரூர் பேருந்து நிலையத்திற்கும் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இச் சாலை சிதலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் உட்பட இரவு நேரங்களில் நடந்து செல்வோர் வரை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். இதுகுறித்து மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.குமார் கூறுகையில், குண்டும், குழியுமாக உள்ள அம்பேத்கர் நகரின் பிரதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத் தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, விரை வில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.