ஈரோடு, ஜுன் 26- ஈரோடு மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் திண்டல் அருகே காரப்பாறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோடு மாநகரில் பங்காரு நகர், மெடிக்கல் நகர், காரப்பாறை புதுக் காலனி, சின்னமேடு மற்றும் கீதாஞ்சலி பள்ளி வரை குண்டும் குழியுமாக உள்ள சாலைகள சீரமைக்க வேண்டும். புதுக் காலனியில் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்துள்ள சமுதாயக்கூடத்தை புதிதாகக் கட்டித்தர வேண்டும். செங் கோடம்பாளையம் பகுதியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் வி.ரவி தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன், தாலுகா செயலாளர் எம். பாலசுப்ரமணி, மாவட்டக்குழு உறுப் பினர் பா.லலிதா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.