districts

img

பி.என்.பாளையம் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கடலூர், பிப்.14-  கடலூர் மாவட்டம், பி.என்.பாளையம் பகுதிக்கு குடிநீர், கழிவறை, தெருவிளக்கு, சாலை, நூலகம்,100 நாள் வேலை, சுடுகாடு சம்பந்தமான மக்களின்  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அண்ணா கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நெல்லிக்குப்பம் பகுதி குழு உறுப்பி னர்  இ.சுந்தர பாண்டியன்  தலைமை தாங்கினார் . பி.என்.பாளையம் கிளைச் செயலாளர்கள் விக்னேஸ்வரன், ராபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.ஜெய பாண்டியன், டி.கிருஷ்ணன், பகுதி குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், பண்ருட்டி நகர செயலாளர் தேவராஜ்லு, பகுதி குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடேசன், எஸ்.தர்மேந்திரன், எஸ்.தண்டபாணி, மூத்த தோழர் ஆர்.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனு கொடுக்க சென்றபோது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து,  வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு வந்தார். பிறகு, கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர், 15 தினங்களுக்குள் கோரிக்கைகள் மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.