திருப்பூர், மே 5 - மனிதகுல விடுதலைக்கு விஞ்ஞான கம்யூனிஸ தத்துவத்தை வழங்கிய மாமேதை காரல் மார்க்ஸ் 205ஆவது பிறந்தநாள் விழா திருப்பூர் பி.ஆர்.நிலையத்தில் வெள்ளி யன்று கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண் ணிகிருஷ்ணன், தெற்கு மாநகர செயலாளர் த.ஜெயபால், தெற்கு மாநகர குழு உறுப்பி னர்கள் பி.பாலன், ஜி.செந்தில்குமார், ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் சுகு மார், துணைத் தலைவர் சி.பெருமாள், பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் என். சுப்பிரமணியன், நிர்வாகி ஜி.ராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஊத்துக்குளி மாமேதை. காரல் மார்க்ஸ்சின் 205ஆவது பிறந்த தினத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் வெள்ளியன்று காலை ஊத்துக்குளி டவுன் பேருந்து நிறுத்தத்தில் காரல் மார்க்ஸ்சின் உருவப்படத்திற்கு மரி யாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஊத்துக்குளி தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, ஊத்துக்குளி டவுன் கிளை செயலாளர் கே.பெரியசாமி, பாரதிநகர் கிளை செயலா ளர் பா.பிரசாந்த், வாலிபர் சங்க தாலுக்கா செயலாளர் பாலமுரளி, பொருளாளர் விக் னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவிநாசி அவிநாசியில் மாமேதை காரல் மார்க்சின் 205ஆவது பிறந்ததினம் பல்வேறு இடங்க ளில் கொண்டாடப்பட்டது. மாமேதை காரல் மார்க்ஸ் 205வது பிறந்த தினமான வெள்ளி யன்று, அவிநாசி, திருமுருகன்பூண்டி, அம் மாபாளையம், பாரதிநகர், ராக்கியாபாளை யம், ஆட்டையாம்பாளையம் உள்ளிட்டு பல் வேறு இடங்களில் காரல் மார்க்ஸின் திருவு ருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.