districts

img

தியாகிகள் கண்காட்சி திறப்பு விழா

திருப்பூர் ஜூன் 18-  திருப்பூா் குமரன் நினைவகத்தில் திருப்பூர் மாவட்ட சுதந் திரப் போராட்டத் தியாகிகள் 63 பேரின் புகைப்படக் கண் காட்சி திறப்பு விழா மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை யில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாக தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங் கேற்று கண்காட்சியை திறந்துவைத்தனா். இதுகுறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழக முதல் வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்திய சுதந்திரத்துக் காக பாடுபட்ட தியாகிகளைக் கவுரவிக்கும் வகையில்  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திப்போ ராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சி அமைக்கப் பட்டு வருகிறது. இதன்படி திருப்பூா் குமரன் நினைவு  மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன் நினைவு நாளைப் போற்றும் வகையில் இந்தக்கண்காட்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் தமிழ்  வளா்ச்சிக்காகப் பாடுபட்ட தமிழறிஞா்கள் 45 பேரின் புகைப் படங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச் சியில்திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப் பினா்செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமார், துணைமேயா்பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணை யாளா் கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் சமிதி மாநில பொதுச்செயலாளா் பி.ஆா்.நடரா ஜன் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரா்கள் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.