ஈரோடு, ஜன.19- ஈரோட்டில் நடைபெற்ற தியாகி கள் தினத்தில் மூத்த தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். தியாகிகள் தின சிறப்புப் பேரவை ஈரோடு, விபி.சிந்தன் நினைவகத்தில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனு சாமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி வர வேற்றார். விவசாயிகள் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் டி. ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, நிகழ்ச்சியில் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டு, இன்றும் இடது சாரி இயக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் மூத்த தலைவர் களுக்கு பயனாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதன்பின், டி.ரவீந்திரன் தியாகிகள் தின நினைவு தின உரையாற்றுகையில், 40 ஆண்டு களுக்கு முன்னர் போராடிய கோரிக் கைக்காக போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. தொழிலா ளிக்கும், முதலாளிக்குமான உறவு மாறியிருக்கிறது. தொழிலாளியின் தன்மை மாறியிருக்கிறது. வேலை கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டி ருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி யாவில் 4 லட்சம் விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். விலை வீழ்ச்சியால், கடன் நெருக் கடியால் தற்கொலை நடை பெற்றது என ஆய்வுகள் கூறுகிறது. மோடி ஆட்சியில் 1 லட்சம் விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சமீபத்திய ஆய்வுகளில் கிராமப்புறங்களில் 17 கோடியே 25 லட்சம் குடும்பங்கள் வாழ் கின்றன. அதில் 9 கோடியே 93 லட்சம் குடும்பங்கள் நிலம் வைத்து வாழ்க்கை நடத்துகிற குடும் பங்கள். 7.25 கோடி பேர் நிலமற்ற குடும்பங்கள். நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் வங்கியில் கடன் பெற முடியவில்லை. அவர்கள் மீட்டர் வட்டிக்கும், கந்து வட்டிக்கும் கடன் பெற்று நெருக்கடிக்கு ஆளா கிறார்கள். கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 32 ஆயிரம் நிலமற்ற தினக்கூலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று புள்ளி விபரம் சொல்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக பலருக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு முதலாளி, ஒரு கம்பெனிக்கு தொழிலாளி யாக வேலைக்குச் சென்று கொண் டிருக்கிறார். வேலை வாய்ப்பை ஆதாரமாகக் கொண்டது சிறு, குறு தொழில்கள். மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் சிறு,குறு தொழில்கள் முடக்கப் படுவது, அழிக்கப்படுவது அந்த நாட்டில் சமூக கொந்தளிப்பை உரு வாக்கும். வருமான இழப்பு, வேலை இழப்பு, வாழ்க்கை இழப்பு, அதை நோக்கி தேசம் பயணித்துக் கொண்டிருக்கிறது. புதிய பொருளாதார கொள்கை யால் உழைப்பு சுரண்டல் அதிக ரித்துள்ளது. எந்த சட்ட பாது காப்பும் தொழிலாளிக்கு இல்லை. தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் கண்ணெதிரே பறிக்கப்படுகிறது. அதைத்தான் மோடி அரசு செய்கிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை பாது காக்க பழைய சட்டங்களை ரத்து செய்துவிட்டு புதிய சட்டங்களை கொண்டு வருகின்றனர். தருமம் செய் என்றுதான் வேதங் கள் போதித்தான. வறுமையை ஒழி என்று சொல்லவில்லை. அப்படியென்றால் சோற்றிற்கு இல்லாதவன் இருப்பான் என்று தான் பொருள். இந்த பின்னணியில் இந்தியாவில் வகுப்புவாத பாஜக வை அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். பொருளாதார கொள் கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மாற்று அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களை சந்திப்போம். செங்கொடியை உயர்த்தி பிடிப்போம். தொழிலாளி, விவசாயி, விவசாய தொழிலாளி வர்க்க ஒற்றுமை, வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது கண்முன் உள்ள நடைமுறை. அதனை முன்னெடுக்க வேண்டும், என்றார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், விதொச மாவட்ட தலைவர் கே.ஆர். விஜயராகவன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், சிஐடியு மாவட்ட துணை செய லாளர் கே.மாரப்பன் நன்றி கூறி னார்.