அவிநாசி, ஜன.20- அவிநாசியில் தியாகிகள் தின நினைவஞ்சலி மற்றும் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. 1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தஞ்சாவூரில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட் டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறை யினர் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் வீரமரணமடைந்தனர். இவர்க ளின் நினைவு நாள் தியாகி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக, இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவ சாய சங்கம், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் அவிநாசி அரு கேயுள்ள சேவூர் செல்லும் சாலையில் புதனன்று நினைவஞ்சலி கூட்டம் மற் றும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.இதில் சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சம்மேளன மாநில தலைவர் முத்து சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி ஈஸ்வர மூர்த்தி, விவசாயிகள் சங்க ஒன்றிய நிர் வாகி முத்துரத்தினம், விவசாய தொழி லாளர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் சண் முகம், முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.