கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு பிஎஸ்என்எல் 800 ஊழியர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு இயங்கி வந்தது. 2.50 லட்சம் தொலைபேசி இணைப்புக ளுடன் 121 எக்சேஞ்கள் செயல்பட்டு வந்தது. வெளியூர் அழைப்புகளுக் காத்திருந்து பேசும் காலம் போய் தானியங்கி எக்சேஞ்சுகளாகி நவீன வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முறையில் சேவையளிக்கப்பட்டது. ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு பற்றிய அச்சம் இல்லை. குடியி ருப்புகள் அமைத்துக் கொடுக்கப் பட்டன. ஆட்சிகள் மாறியபோது காட்சிகளும் மாறின. 2014ல் மத்தி யில் ஆட்சிக்கு வந்த பாஜக, மத்திய அரசின் கட்டுப்பாட் டில் இருக்கிற தொலைத்தொடர் புத்துறையை சாதகமாக்கிக் கொண்ட பாஜக தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு ஆதரவாக தொலைத்தொடர்புத் துறையைக் கடை விரித்தது. ஜியோ சிம்முக்கு விளம்பர தூதுவராக கட்அவுட்டில் தோன்றியவர், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லை முடித்துக்கட்டும் வேலையை ஆரம்பித்தார். சட்டப் பாதுகாப்புடன் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு, பணியாளர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் அளிக்கப்படவில்லை. போராடி பெற வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டனர். ரகசிய கணக் கெடுப்பு நடத்தி கணிசமானோரை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டதில், ஈரோடு மாவட்டத்தில் 75 விழுக்காட் டினர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். குறிப்பாக 700 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். இன்று சுமார் 170 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஈரோடு என்கிற ஒரு மாவட்டத்தில் மட்டும இந்நிலை என்றால் நாடு முழுவ தும் கணக்கிட்டுக் கொள்ளலாம். ஈரோட்டில் மட்டும் 52 எக்சேஞ்கள் மூடப்பட்டு விட்டன. சுமார் 30 ஆயி ரம் தொலைபேசி இணைப்புகளாகச் சுருங்கி விட்டது. அனைத்து பணிக ளும் தனியாருக்கு விடப்பட்டன. டிஜிட்டல்...டிஜிட்டல் என வாய் கிழிய பேசியவர் தனியாருக்குக் கொடுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமத்தை, பிஎஸ்என்எல்லுக்கு கொடுக்கப்படவில்லை. 2ஆம் தலை முறையிலிருந்து 4ஐக் கடந்து 5 ஆம் தலைமுறைக்கு வந்து விட்டோம். ஆனால் பிஎஸ்என்எல் க்கு 4ஜி சேவை வழங்கப்படவில்லை. இன்று போய் நாளை வா என்ற கதைதான் தொடர்கிறது. அலுவல கத்தைத் தவிர அனைத்து பணிக ளும் தனியாருக்கு விடப்பட்டுள் ளன. பணியாளர்கள் டென்டர் மூலம் நியமிக்கப்பட்டனர். வேலை அடிப்ப டையில் தரை வழி கேபிள் பராமரிப்பு, கண்ணாடி இழை கேபிள் பராமரிப்பு, எஸ்டிஆர் பராமரிப்பு, வாடிக்கையா ளர் சேவை, காவலர் பணி, துப்புரவா ளர் உள்ளிட்ட ஹவுஸ்கீப்பிங் பணி, செல்போன் கோபுரம் பராமரிப்பு அனைத்தும் தனியாருக்கு விடப் பட்டுள்ளது. சுமார் 600 பேர் செய்து வந்த வேலையை இன்று 200 பேர் மட்டுமே செய்து வருகின்றனர். குறைந்தபட்ச கூலி சட்டம், வருங் கால வைப்பு நிதி, மருத்துவ வசதி உள்ளிட்ட எந்த உரிமைகளும் இல்லை. ஒப்பந்ததாரர் கொடுக்கும் சம்பளமே ஊதியம். இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை ஊழியர்க ளின் பணி இவ்வாறு முறைசாரா தொழிலாளர்களைப் போல மாற்றப் பட்டுள்ளது. தொழிலாளர் நலனுக்கு எதிரான பாசிட்டுகளை தொடர்பு எல்லைக்கு அப்பால் அனுப்ப வேண்டிய கடமையை எதிர்வரும் தேர்தல் மூலம் நிறைவேற்றுவது அனைவ ரின் கடமையாகும். எஸ்.சக்திவேல்