districts

img

பெண் காவலர்கள் பங்கேற்ற மாரத்தான்

கோவை, மே 26- தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்த 50 ஆண்டுகளை கொண்டா டும் விதமாக கோவையில் பெண் காவ லர்கள் பங்கேற்ற மாராத்தான் போட்டி நடைபெற்றது. இதனை தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு துவக்கி வைத்தார். கோவை மாநகர காவல் ஆணை யாளர் அலுவலகத்தில் துவங்கிய மாரத் தான், பந்தய சாலை. அண்ணா சிலை  வழியாக ஆயுதப் படை மைதானத்தில் முடிவடைந்தது. 5 கிமீ தூரம் நடை பெற்ற இந்த மாரத்தான் போட்டியில் டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாந கர காவல் ஆணையாளர் பாலகிருஷ் ணன், மாநகராட்சி ஆணையாளர் பிர தாப், கோவை மாநகர காவல் தலைமை யிட துணை ஆணையர் சுகாசினி, மாந கர துணை காவல் ஆணையர் சந்திஷ்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, ஆயுதப்படை  மைதானத்தில் கலவரக்காரர்களை பெண் போலீசார் கட்டுப்படுத்தும் ஒத் திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

 புதிய காவல் நிலையங்கள் திறப்பு கோவையில் பல்வேறு காவல் துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை மாநகரில் கவுண்டம் பாளையம், போத்தனூர், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்களை திறந்து வைத் தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 1352 காவல் நிலையங்கள் இருந் தது, அதில்  202 மகளிர் காவல் நிலையங் கள் மட்டும்  தான் இருந்தது.  பிறகு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு 1574 காவல் நிலையங்கள் தற்போது உள்ளது. கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில் 20 காவல் நிலையங்களாக அதிகரித்துள் ளது. இணையவழி குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இக்குற்றங்களில் உள்ளூர் அல்லது இந்தியாவிற்குள்  உள்ள குற்ற வாளிகளை எளிதாக பிடித்து விடும்  நிலையில் வெளிநாடு குற்றவாளிகளை பிடிப்பது சிறிது சிரமமாக உள்ளது. காவல்துறை சார்பில் மக்களுக்காக காவல் உதவி என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்  66 வகையான உதவிகளை பெற முடியும். ஆனால் இந்த செயலியை பலரும் பதி விறக்கம் செய்யவில்லை. இது ஆண்ட் ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளா வும் உள்ளது. இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும், என்றார்.