districts

img

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு

கோவை, ஜூன் 13- மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வரும் புதிய  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை என் ஹெச்ஐஎஸ் செயல்படுத்த தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள அரசாணை எண்: 160 - 29.06.2021 இன் படி ஆசிரியர்கள் மற்றும் அரசு  ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். ஆனால், யுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும், அந் நிறுவனத்திடம் மூன்றாம் நபர் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ள எம் டி இந்தியா மற்றும் மடி  அசிஸ்ட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்கா மல் உள்ளனர். சிகிச்சை பெறும் ஆசிரியர் கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சைக் கான கட்டணத்தில் 20 சதவீதம் முதல் 40 சத வீதம் வரை மட்டுமே அனுமதித்து மிகப்பெ ரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன. இம்முறை கேடு மீது தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், அரசாணைப்படி கட்டணமில்லா  சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்துவ தோடு, காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத் துவமனைகளின் முறைகேடுகள் தொடர் பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு ஆராம்ப  பள்ளி ஆசிரியர் கூட்டணி, கோவை மாவட்ட  கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலவலம்  முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.ரங்க நாதமூர்த்தி தலைமை வகித்தார். இதில், மாவட்டச்செயலாளர் அ.தங்கபாசு, தமிழ்நாடு  முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் மாவட்டச் செயலாளர் சாலமன் ராஜ், தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கள் கழகம் மாவட்டச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், மாவட்டப் பொருளாளர் மா. ராஜாத்தி நன்றி  கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஆரம்ப பள்ளி  ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.