districts

img

காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை பலி

உடுமலை, ஜுன் 25- காண்டூர்  கால்வாயில் 15 வயது மதிக்கத் தக்க ஆண் யானை தவறி விழுந்து இறந் தது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி அணைக்கு தொகுப்பு  அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழி யாக தண்ணீர் கொண்டு வந்து அணையில் சேமிக்கப்படுகிறது. இந்த  கால்வாய்  மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனப்ப குதியை ஒட்டி உள்ளதால், யானை மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க வரும். இந்நிலையில் கால் வாயில் தண்ணீர் குடிக்க வந்த 15 வயது மதிக் கத்தக்க ஆண் யானை தவறி கால்வா யில் விழுந்து இறந்ததுள்ளது. நீண்ட தூரம்  கால்வாயில் அடித்து வரப்பட்ட யானையின்  சடலம் திருமூர்த்தி அணையில் ஒதுங்கியது.  தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை யினர் யானையின் சடலத்தை கைப்பற்றி புதனன்று பிரேத பரிசோதனை செய்தனர்.  சம்பவம் குறித்து தீவிர விசாரனையில் ஈடு பட்டு வருகின்றனர்.