கோவை, செப்.29- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவர்கள், பேராசிரியர்கள் விதை பந்துகள் தயாரித்து, உலக சாதனை செய்தனர். கோவை மாவட்டம், வேளாண் பொறியி யல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார் பில் மெகா விதைப்பந்து தயாரிப்பு நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விதை பந்துகளை தயார் செய்த னர். சிவப்பு மண் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றைக் கொண்டு விதைப் பந்து களை தயார் செய்வதற்காக கஸ்ஸட் மரம், சீத்தாப்பழம், பட்டு பருத்தி, இந்திய சிரிஸ், வேம்பு, பசிபிக் ரோஸ்வுட் மற்றும் ரெயின்ட்ரீ போன்ற விதைகள் தேர்ந்தெடுக்கப்பட் டன. தொடர்ந்து, விதைப்பந்து தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்க லைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி பரிசுகளை வழங்கினார். சர்வதேச வாசவி கிளப் ஏற்பாடு செய்த ஒரு கோடி விதைப்பந் துகள் தயாரிப்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மாண வர்கள் பலர் பங்கேற்று உலக சாதனை செய்தனர்.