உடுமலை, மே 20- உள்ளாட்சித்துறையில் பணிபுரி யும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி மற் றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங் கத்தினர் உடுமலையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். 7 ஆவது ஊதியக்குழு பரிந் துரைப்படி உள்ளாட்சிகளில் பணி யாற்றும் குடிநீர் மேல்நிலை தொட்டி பணியாளர்களுக்கு மாநிலம் முழுவ தும் ஒரே விகித அடிப்படையில் ஊதி யம் வழங்க வேண்டும். ஊழியர்க ளுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பல வருடங்களாக எவ் வித சட்ட சலுகைகளும் இல்லாமல் உள்ளாட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் முன்களப்பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க உடுமலை தாலுகா தலைவர் ஈஸ் வரன் தலைமை வகித்தார். இதில், சிஜடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்ட துணைச்செய லாளர் ஜெகதீசன், மோட்டார் சங்க நிர்வாகி சுதா சுப்பிரமணியம், சுப்பி ரமணியம் உள்ளிட்ட உள்ளாட்சித் துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.