சிஐடியு-வினர் குடும்பத்துடன் தர்ணா தருமபுரி, ஆக.20- மின்வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சிஐ டியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் குடும்பத்துடன் தர் ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிப்படி, மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண் டும். மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும். இரண் டாண்டுகளில் 480 நாட்கள் பணி முடிந்த ஒப்பந்தத் தொழிலாளர் களை அடையாளம் கண்டு, கரு ணைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு தமிழ்நாடு மின்ஊழி யர் மத்திய அமைப்பினர் செவ்வா யன்று குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற தர்ணாவிற்கு, அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எம்.கோவிந்த ராஜ் துவக்கவுரையாற்றினார். சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாக ராசன், மாவட்ட துணைத்தலைவர் சி.முரளி ஆகியோர் சிறப்புரை யாற்றினார். மின்வாரிய அண்ணா தொழிற் சங்க மண்டலச் செயலாளர் சாந்த மூர்த்தி, மின்வாரிய பொறியாளர் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜ யன், தையல் சங்க மாவட்டத் தலை வர் சி.அங்கம்மாள், அரசு போக்குவ ரத்து கழக மண்டல பொதுச்செய லாளர் எஸ்.சண்முகம், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனஸ்ட்ராஜ், பஞ் சாலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.கண்ணதாசன், ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் ராமன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இதில் மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.ஆறுமுகம், எஸ். பி.சிவக்குமார், மாவட்ட இணைச் செயலாளர்கள் கே.ஜெகநாதன், எம்.காளியப்பன், ஏ.கோவிந்தன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.விஜயன் நன்றி கூறினார். சேலம் இதேபோன்று, சேலம் மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்கள் சங்கத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மின்ஊழியர் மத்திய அமைப் பின் நிர்வாகிகள், ஒப்பந்தத் தொழி லாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.