கோவை, நவ. 18- மக்காபோன் தாமு என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் பி,ஆர் புரம் தோழர் தாமோதரசாமி (88) வயது மூப்பு காரணமாக திங்களன்று காலமானார். பஞ்சாலை தொழிலாளி யான தோழர் தாமு என்கிற தாமோதரன். சிஐடியு சங்கத் திலும், மார்க்சிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துகொண்டவர். பீளமேடு வட்டாரத்தில் உள்ள பஞ்சாலையில் பணியாற்றியபோது தொழிலாளர்க ளின் உரிமைகளுக்காக போராடியதன் விளைவாக வேலையி லிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நிலமீட்பு இயக்கம். விலைவாசி உயர்வு. ரயில்வே வேலைநிறுத்தத்திற்கு ஆத ரவு போன்ற போராட்டங்களில் பங்கேற்று ஏழுமுறை சிறை சென்றுள்ளார். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்கான போராட் டத்தில் முன்னின்று, சிறை வாசம் அனுபவித்தவர். உழைக் கும் மக்களின் உணர்வை புரிந்து அவர்களுக்கு புரியும் வகை யில், அற்புதமாக பேசக்கூடியவர். மக்கா போனில் துவங்கி, தெருமுனை பிரச்சாரம், மேடைப்பேச்சு என அனைத்திலும் தனக்கே உரிய வகையில் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரக்குழு உறுப்பினராக, பஞ் சாலை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி என பல பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றியவர். கோவை பீளமேடு, ஓப் காலேஜ், தண்ணீர் பந்தல் ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்ற வர். கட்சிக்கு செலுத்த வேண்டிய லெவி கட்ட தாமதமானது. அவரை விடுவிக்க போகிறார்கள் என்பதை அறிந்து, நகரக்குழு அலுவலகத்திற்கு வந்து, நான் கட்சியி டம் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. நான் இறந்தால் என் மீது இந்த செங்கொடியை போர்த்த வேண்டும் என லெவியை கட்டிச்சென்றார். தீக்கதிர் முதல் வார இதழ் உப்பிலிபாளையத் தில் வெளியிட்டபோது அதில் பங்கேற்ற அனுபவத்தோடு இறு திவரையிலும் தீக்கதிர் வாசித்தவர். செங்கொடி இயக்கத்தின் மீது அளவற்ற காதல் கொண்ட தோழர் தாமோதரன் வயது மூப்பின் காரணமாக திங்க ளன்று மசக்காளிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரின் மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.பாண்டியன், தி.மணி, பீளமேடு நகரச்செயலாளர் அ.மேகநாதன், சிங்கை நகரச்செயலாளர் ஆர்.மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் பூபதி உள்ளிட்ட தலை வர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.