districts

img

மக்காசோளம் விளைச்சல் பாதிப்பு நிவாரணம் தர விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, மார்ச். 19- பருவமழை இல்லாததால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உரிய நிவா ரணத்தை அரசு தர வேண்டும் என விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலும் உடுமலைப் பேட்டை சுற்று வட்டாரத்திலும் விவசாயி களின் முக்கிய சாகுபடி பயிராக திகழ்ந்து  வருவது மக்காச்சோளம். கோழி மற்றும்  மாட்டு தீவனங்களின் தேவை அதிக ரித்தை தொடர்ந்து தீவனங்கள் தயாரிக் கும் முக்கிய மூலப்பொருளான மக்காச்சோ ளத்தின் தேவையும் கடந்து சில ஆண்டு களாக அதிகரித்துள்ளது. உடுமலை சுற்றுவட்டாரத்தில் பெரும்பா லான விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு முறை யாவது மக்காச்சோளப் பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். தற்சமயம், பல ஆயி ரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகு படி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அறு வடை நடைபெற்று வருகிறது.  கடந்த மாதம்  100 கிலோ மூட்டை 2500 ரூபாய்க்கு விற்ப னையானது, ஆனால் அறுவடை துவங்கிய  பிறகு 200 முதல் 300 ரூபாய் வரை மூட்டைக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த   பருவமழை  போதிய அளவு பெய்யவில்லை. பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட் டத்தில் போதிய நீர் கிடைக்கவில்லை. மேலும், படைப்புழுவின் தாக்குதல் அதிக ரித்து பயிர்கள் பாதிக்கப்பட்டது. இத னைத்தொடர்ந்து, கூடுதலாக மருந்து கள் அடிக்கப்பட்டு புழுக்கள் கட்டுப் படுத்தப்பட்டது. ஆனாலும், அந்த புழுக்க ளின் பாதிப்பு தற்பொழுது அறுவடையில் எதி ரொலித்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 35 மூட்டை  விளைச்சல் தர வேண்டிய மக்காச்சோளம், தற்பொழுது 18 முதல் 20 மூட்டை வரை மட்டுமே விளைந்துள்ளது. மேலும் மக்காச்சோள கருதுகள் அனைத் தும் சுருங்கியும் சிறுத்தும் போய்விட்டது. இத னால் பல்வேறு இன்னல்களை மக்காச் சோள விவசாயிகள் சந்தித்து வருகின் றனர். முதலில் படைப்புலு தாக்குதல் இரண்டாவது நீர் பற்றாக்குறை, மூன்றா வது மகசூல் பாதிப்பு, நான்காவது விலை  சரிவு என நான்கு திசையிலும் மக்காச்சோள விவசாயிகள் இந்த ஆண்டு பாதிப்பை சந் தித்து வருகின்றனர். எனவே, அரசு பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அல்லது உதவித் தொகையை வழங்க வேண்டும் என இப்பகுதி மக்காச்சோள விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.