districts

img

மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணி

மேட்டுப்பாளையம், பிப்.15- உதகை மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.  உதகை மலை ரயில் பாதை 1889 ஆம் ஆண்டு கட் டப்பட்டதாகும்.  உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை  ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி உதகைக்கு இயக்கப்படுகிறது. உள்நாடு மட்டு மின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணி களையும் இம்மலை ரயில் ஈர்த்துள்ளது.  இந்த  மலை ரயில் பாதையில் தற்போது சீரமைப்பு பணிகள் வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கல்லார்  ரயில் நிலையம் வரை மலைரயில் கடந்து செல்லும் இருப்பு பாதையின் அடியில் ஏழு இடங்களில் மழைநீர்  வடிகால் பாலங்கள் கடந்த 1889 ஆண்டு அமைக்கப் பட்டுள்ளது.

இதில் பூமிக்கடியில் கற்களால் கட்டப்பட்ட குகை போன்ற இப்பாலங்கள் நூறாண்டுகளை கடந்தும் இதுவரை பெரியளவில் சேதங்கள் ஏற்படாமல் பயன் பாட்டில் இருந்தது.  ஆனால், காலத்தை கணக்கிட்டு இதனை புதுப்பிக் கும் பணியில் தற்போது ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வரு கிறது. மூன்றரைக்கு மூன்றரை என்ற அளவில் பெட்டி  போன்ற அமைப்பில் மிக உறுதியான கான்கரீட் தளங்கள் அமைக்கப்பட்டு அவற்றை பழைய வடிகால் பாலங்கள் இருந்த இடத்தில் ராட்சத கிரேன்கள் உதவியுடன் பொருத் தும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த ரயில்பாதை சீரமைப்பு பணிகள் அனைத்தும் மலைரயில் போக்குவரத்தை பாதிக்காத வகையில்  திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 புறப்பட்டு செல் லும் மலைரயில் மீண்டும் உதகையில் இருந்து புறப் பட்டு மாலை 5.45 அளவிலேயே மேட்டுப்பாளையம் வந்த டைகிறது.  காலையில் ரயில் கடந்து சென்றவுடன் அதன் இருப்புப்பாதையில் துவங்கும் பணிகள் மாலை ரயில் திரும்பும் முன்பாக முடிக்கப்பட்டு வருகிறது. இருப்புப்பாதையில் அடியில் உள்ள ஏழு மழைநீர் பாலங்கள் மாற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இது வரை போக்குவரத்து இடையூறின்றி இரண்டு இடங்க ளில் பாலங்கள் மாற்றப்பட்டு விட்டன. ரயில்வே நிர்வாக அதிகாரிகளின் மேற்பார்வையில் பணியாளர்கள் இச்சீர மைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.