திருப்பூர், செப்.28- புரட்சியாளர் பகத்சிங்கின் 116 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் எஸ்.வி. காலனி, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாநகரம் சார்பில் எஸ்.வி காலனியில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் கிஷோர் குமார் தலைமை ஏற்றார். பகத்சிங் சிலம்பக் குழு பயிற்சியாளர் அருணாசலம் கொடி ஏற்றி வைத்தார். இதில், கிளைப் பொறுப்பாளர் பிரனேஷ் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதேபோல ஊத்துக்குளி பாரதி நகர் கிளையின் சார்பில் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்று நிகழ்ச்சி நடை பெற்றது. கிளை உறுப்பினர் ஆர்யா தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் பவதாரணி கொடி ஏற்றி வைத்தார். தாலுக்காப் பொருளாளர் விக்னேஷ், முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகி ராஜசேகரன், கிளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.