districts

img

மக்னா யானை வனப்பகுதியில் விடப்பட்டது

உதகை, டிச.9- கூடலூரில் பகுதியில் 2 பெண் களைக் கொன்ற மக்னா யானை, 18 நாள்கள் தீவிர முயற்சிக்கு பின்னர் சீகூர் வனப்பகுதியில் வெள்ளி யன்று அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர்  தாலுகா, தேவாலா வாழவயல் பகு தியில் பாப்பாத்தி என்பவரை கடந்த நவ.20 ஆம் தேதியன்று மக்னா யானை தாக்கிக் கொன்றது. இதே போல, புளியம்பாறை கிராமத்தில் கல்யாணியம்மா என்ற மூதாட் டியை கடந்த டிச.3 ஆம் தேதி மக்னா யானை தாக்கிக் கொன்றது. மேலும், அப்பகுதியில் உள்ள குடி யிருப்புகளையும் சேதப்படுத்தி யது. இதையடுத்து, மக்னா யானை யைப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வந்தனர். பல் வேறு கட்சியினரும் மக்னா யானை யைப் பிடிக்க வலியுறுத்தினர். இதையடுத்து வனத்துறையினர் யானையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நி லையில், தேவாலா தேயிலைத் தோட்டம் மூன்றாவது சரகப் பகுதி யில் உள்ள காளிமுத்து என்பவரின் வீட்டை புதனன்று நள்ளிரவு மக்னா  யானை இடித்து சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த வனத்துறை யினர் யானையை வனப் பகுதியில்  விரட்டி, தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நீடில்ராக் வனப்பகுதி யில் முகாமிட்டிருந்த மக்னா யானைக்கு வியாழனன்று வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி னர். மயக்க ஊசி செலுத்தியவுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடிய மக்னா யானையை விஜய், சுஜய்,  வசிம், கிருஷ்ணா ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் வனத் துறையினர் வெளியே கொண்டு வந்தனர். லாரி மூலம் முதும லைக்கு மக்னா யானை அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவப் பரிசோதனை செய்தபின் அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித் தனர். இந்நிலையில், 50க்கும் மேற் பட்ட வீடுகளை சேதப்படுத்தி, 2  பெண்களைக் கொன்ற மக்னா  யானை 18 நாட்கள் தீவிர முயற்சிக்கு பின்னர், கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி வியாழனன்று பிடிக் கப்பட்ட பி.எம். 2 என்ற மக்னா யானை, ரேடியோ காலர் கருவி  பொருத்தப்பட்டு, சீகூர் வனப்பகுதி யில் வெள்ளியன்று அதிகாலை யில் வனத்துறையினர் பாதுகாப் பாக விடுவித்தனர்.