districts

மதுரை முக்கிய செய்திகள்

கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் தேர்தல் ஒத்திவைப்பு

திருவில்லிபுத்தூர் மார்ச் 4  விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி பேரூ ராட்சியில் வெள்ளியன்று நடைபெற்ற தலை வருக்கான தேர்தலில் சுப்புலட்சுமி என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். மாலையில் பேரூராட்சி துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் ஒரு வார்டு உறுப்பினர் ராஜினாமா செய்ததால் 14-வார்டு உறுப்பினர்கள் வாக்க ளிப்பில் கலந்து கொள்ள வேண்டும் ஆனால் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் தேர்தல் அலுவலர் சிவ அருணாச்சலம் தேர்தலை ஒத்தி வைத்தார்.

தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவராக திமுக கவுன்சிலர் தேர்வு காங்கிரசார் மறியல்

தேனி, மார்ச்.4- காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியதால் காங்கி ரஸ் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.  தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 19 வார்டு களிலும், அதிமுக 7 வார்டுகளிலும், காங்கிரஸ், அமமுக, சுயேட்சைகள் தலா 2 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. நகராட்சித் தலைவர் பதவி பெண்க ளுக்காக ஒதுக்கப்பட்டது. திமுக நகரப் பொறுப்பாளர் பாலமுருகனின் மனைவி ரேணுப்பிரியா தேனி நகராட்சியின் 10-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இந்நிலையில், நகராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணிக் கட்சியான காங்கி ரசிற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஆணையாளர் வீரமுத்துக்குமார் தலை மையில் வெள்ளியன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 27 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறிது நேரத்தில் தலைவர் வேட்பா ளரான காங்கிரஸ் வார்டு உறுப்பினர் சற் குணம், தனது ஆதரவு வார்டு உறுப்பி னர்களான சுப்புலட்சுமி, ராமமூர்த்தி ஆகியோருடன் வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து சற்குணம் கூறுகையில், நகராட்சித் தலைவர் பதவி காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணி தர்மத்தை மீறி திமுக சார்பில் ரேணுப் பிரியா வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதனை கண்டித்து வெளியேறி விட்டோம். கட்சித் தலைமையிடம் இதுகுறித்து புகார் செய்ய இருக்கிறோம் என்றார்.  காங்கிரஸ் தொண்டர்கள் பெரியகுளம் சாலையில் சிறிது நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.