districts

img

மதுக்கரை மேம்பாலப்பணிகள் நிறைவு

கோவை, ஆக.10- மதுக்கரை - வாளையார் இடையே யானைகள் ரயில் பாதையை கடக்க பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் 6 கோடி ரூபாய் மதிப்பில்  கட்டப்பட்டு வந்த மேம்பாலப் பணி கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனை வனத்துறை செய லாளர், தலைமை வன பாதுகாவலர் ஆகியோர் ஆய்வு செய்த னர். கோவையில் இருந்து மதுக்கரை வழியாக கேரளா மாநி லத்திற்கு செல்ல ஏ மற்றும் பி என இரண்டு ரயில்  வழி தடங் கள் உள்ளது. இதில் மதுக்கரை முதல் வாளையார் வரை  சுமார் 11 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.  இந்த வழியாக இந்த ரயில் பாதை செல்வதால் வனப்பகுதி யில் இருந்து வெளியேறும் யானைகள் ரயில் பாதையை கடந்து ஊருக்குள் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரி ழந்த வருவது தொடர்ந்து வருகிறது.  அண்மையில் குட்டியுடன் சென்ற மூன்று யானைகள் ரயில்  மோதி உயிரிழந்த நிலையில் யானைகள் ரயில் பாதையை கடக்க மாற்று வழியை பின்பற்ற வேண்டுமென சூழலியல்  ஆர் வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும், இது குறித்து ரயில்வே துறைக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டமாக கடி தம் வாயிலாகவும் ஆலோசனை கூட்டத்திலும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, பாலக்காடு ரயில்வே கோட்டம் சார் பில் யானைகள் செல்லும் வகையில் எட்டிமடை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் பணி கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதால் யானைகள் இதன் வழியாக ரயில் பாதை கடந்து செல்ல வசதியாக இருக்கும் என வனத் துறையினர்  தெரிவித்தனர். இதன்படி மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் தமிழக வனத்துறை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி ஆகி யோர் புதிய பாலத்தை  ஆய்வு செய்தனர் மேலும் அங்கு  அமைக்கப்பட உள்ள தெர்மல் கேமரா பயன்பாடு குறித்தும்  அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர் மதுக்கரை வாளையார் இடையே நடைபெற்ற ஆறு ரயில் விபத்துகளில் 11 யானைகள் உயிரிழந்த நிலையில் யானைகள் ரயில் பாதையை கடந்து செல்ல  தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.