districts

img

மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்து மடத்துக்குளம், காங்கயத்தில் பிரச்சார இயக்கம்

திருப்பூர், மே 26–  ஒன்றிய மோடி அர சின் மக்கள் விரோத கொள் கைகளைக் கண்டித்து இடது சாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் பங்கேற்ற பிரச்சார இயக்கம், ஆர்ப் பாட்டம் மடத்துக்குளம், காங்கயத்தில் வியாழக் கிழமை நடைபெற்றது. மடத்துக்குளத்தில் நடை பெற்ற பிரச்சார இயக்கத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் மடத்துக்குளம் தாலூகா செயலாளர் ஆர்.வி.வடி வேல் தலைமை ஏற்றார். நர சிங்காபுரத்தில் தொடங்கி மடத்துக்குளம் நால் ரோடு, பேருந்து நிலை யம், வேடபட்டி, சோழமாதேவி, கணியூர், கராத்தொழுவு மற்றும் கடத்தூர் பகுதிகளில் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கை களை அம்பலப்படுத்தி மக்களிடையே பிரச் சாரம் செய்தார்கள். இந்த பிரச்சார இயக்கத்தில் விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சதிஸ்குமார், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன் ஈஸ் வரன் மற்றும் சேகர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் கள் பன்னீர் செல்வம், ராஜரத்தினம், ஈஸ் வரன் மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கயம்

காங்கயத்தில் மோடி அரசின் விலை வாசி உயர்வுக் கொள்கைகளை எதிர்த்து  பிரச்சார இயக்க ஆர்ப்பாட்டம் வியாழ னன்று நடைபெற்றது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த இயக் கத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் செல்லமுத்து தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட் டக்குழு உறுப்பினர் திருவேங்கடசாமி, சிபிஐ ஒன்றிய நிர்வாகி முத்துசாமி, மார்க் சிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பினர்கள் கணேசன், தங்கவேல், நகர கிளைச் செய லாளர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.