districts

img

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை, நவ.1- நூறு நாள் வேலை சம்பள பாக் கியை உடனடியாக வழங்க வலியுறுத்தி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு விவசாய தொழிலாளர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில்  வேலை செய்த ஏழை தொழிலாளர்க ளின் சம்பள பாக்கி நான்கு மாதம் வழங் காமல் உள்ளதை வரும் தீபாவளி பண் டிகைக்குள் வழங்க வேண்டும். இந்த வேலை திட்டத்தில் ஒன்றிய அரசு நிதி  ஒதுக்கீட்டை குறைத்துள்ளதை மீண்டும்  அதிகப்படுத்த வேண்டும். அனைத்து ஊராட்சி பகுதியிலும் சட்டப்படி நூறு வேலையை தொடர்ச்சியாகவும், முறை யாகவும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தினர் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங் கத் தலைவர் எம்.எம்.வீரப்பன் தலைமை வகித்தார். இதில் விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் பஞ்ச லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலூகாச் செயலாளர் ஆர்.வி.வடி வேல், தாலூகாக்குழு உறுப்பினர்கள் பன்னீர் செல்வம், ராஜரத்தினம், ராதா உட்பட திரளான விவசாய தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.