ஈரோடு, நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் சத்தி யமங்கலம் தாலுகாச் செயலாள ராக எம்.முருகன் தேர்வு செய் யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், சத் தியமங்கலம் தாலுகா 14 ஆவது மாநாடு, சத்தியமங்க லம் கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தோழர். சா.க.கண்ணப்பன் நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு எஸ்.ஏ.ராம்தாஸ், டி.பாப்பாத்தி, ஆர். குமாரசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.சுரேஷ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.துரைசாமி துவக்கவுரையாற்றினார். தாலுகாச் செயலாளர் கே.எம்.விஜயகுமார் அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட் டில், சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு செல்ல வசதியாக பேருந்துகள் இயக்க வேண்டும். தண்ணீர்பள்ளம் கீழ் பகுதி யிலுள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். சிக்கரசம் பாளையம் ஊராட்சி, பாரதி நகர், குளத்து பிரிவு பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்க ளுக்கு சுடுகாடு ஒதுக்க வேண் டும். கொத்துகாட்டில் குழந்தை கள் மையம் அமைக்க வேண் டும். சத்தியமங்கலம், கொமராபாளையம் மருத்துவமனையை பல்துறை மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் சத்திய மங்கலம் தாலுகாச் செயலாளராக எம்.முரு கன் மற்றும் 9 தாலுகாக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் நிறைவு ரையாற்றினார். முடிவில், தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.