districts

img

திருப்பூரில் ஸ்வர்ணபுரி சோஷியல் சர்விஸ் மூலம் மலிவு விலையில் மதிய உணவு

திருப்பூர், பிப்.9- திருப்பூரில் ஸ்வர்ணபுரி சோஷியல் சர்வுஸ் மூலம்  மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  திருப்பூர் அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் ஸ்ரீ பரணி ஏஜென்சீஸ் பெட் ரோல் பங்க் வளாகத்தில் ஸ்வர்ணபுரி சோஷியல் சர் விஸ் அமைப்பு சார்பில் மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா திங்களன்று நடைபெற்றது.  இந்த விழாவில் ஸ்வர்ணபுரி சோஷியல் சர்விஸ் அமைப்பின் தலைவர் நடராஜ் மதிய உணவு வழங்கி இந்த சேவையை தொடக்கி  வைத்தார். மேலும் இந்த சேவை குறித்து  நடராஜ், அவரது மனைவி பூங்கொடி,  மகள் திருவேணி, தம்பி ஆர்.எம்.வேலுசாமி,  இவரது மகன் சூரியபாலன் ஆகியோர் கூறியதாவது:  திருப்பூர் மாநகரில் முதன் முறையாக  குறைந்த செலவில் உணவு வழங்கும் சேவையை துவக்கி உள்ளோம். திருப்பூ ரில் கொரோனா நோய் தாக்குதலுக்கு பிறகு பொதுமக்களின் குறிப்பாக, தொழிலாளர் களின் வாழ்வாதாரம்  பெரியளவில் பாதிக் கப்பட்டுள்ளது கண்கூடாக தெரிந்தது. தொழிலாளர்கள் வெளியே சிரிக்கிறார்களே  தவிர, மனதளவில் சிரிக்கவில்லை. அத னால் அவர்களின் சுமையை குறைக்க எங்க ளால் முடிந்த அளவிற்கு சேவை செய்யலாம் என்று இந்த திட்டத்தை தொடங்கினோம். இதில் முழு சாப்பாடு ரூ.30 க்கு தருகி றோம். உணவு பொருட்கள் அனைத்தும் நவீன எந்திரங்களை கொண்டு, சுகாதார முறையில் செய்து தருகிறோம். பாத்திரங் களை மிஷின் கொண்டு சுத்தம் செய்கி றோம். வரும் காலங்களில் காலை மற்றும் இரவு உணவு வழங்குவது குறித்தும் ஆலோ சித்து வருகிறோம். முதல் நாளில் மட்டும்  300க்கும் மேற்பட்டோர் மதிய உணவு சாப் பிட்டுள்ளனர். நாங்கள் படிப்படியாக தின மும், 1000 பேர்களுக்கு உணவு தர முடி வெடுத்துள்ளோம். எங்கள் பங்க் ஊழியர் கள் அனைவரும் தாமாக முன்வந்து இந்த சேவையில் ஈடுபட்டு வருவதும்,  சாப்பிட்ட வர்கள் முழு திருப்தியுடன் வாழ்த்தி சென்ற தும் எங்களுக்கு பெருமையாக உள்ளது, என்றனர்.