districts

img

தூய்மை பணியாளர்களுக்கு நீதி கேட்டு எல்டியுசி அமைப்பினர் பரப்புரை பயணம்

பள்ளிபாளையம், ஜன.8- தூய்மை பணியாளர்களுக்கு நீதி கேட்டு இடது தொழிற் சங்க மையத்தின் (எல்டியுசி) சார்பில் பரப்புரை பயணம் பள்ளி பாளையத்திற்கு வந்தடைந்தது. கோவை முதல் சென்னை வரை இடது தொழிற்சங்க மையம் (எல்டியுசி) அமைப்பின் சார்பில் தூய்மை பணியாளர் களுக்கு நீதி கேட்கும் பரப்புரை பயணம் ஜன.6 ஆம் தேதி யன்று கோவையில் துவங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் வழியாக ஜன.12 ஆம் தேதியன்று சென்னை அம்பத் தூர் பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், பரப்புரை குழு பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதிக்கு வந்தடைந்தது. அப்போது சம வேலைக்கு சம ஊதியம், தூய்மை பணியாளர்களுக்கு கௌரவமான குடியிருப்பு வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இதில், பலர் கலந்து கொண்டனர்.