10 ஆடுகள் பலி: விவசாயிகள் அச்சம்
ஈரோடு, நவ.19- ஈரோடு அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடு கள் அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில் உயிரி ழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகே உள்ள செல்லப் பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (54). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 24 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் சனியன்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து தூங்கச்சென்று விட் டார். இதன்பின் ஞாயிறன்று காலை செல்லப்பன் பட்டியை பார்த்தபோது, பட்டியிலிருந்த 10 ஆடுகள் உயிரிழந்து கிடந் ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 4 ஆடுகள் காயத்துடன் கிடந் தன. இதுகுறித்து திங்களூர் போலீசாருக்கும், வனத்துறை யினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும், போலீசாரும் விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த அடையாம் தெரியாத விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரியவந்தது. வனத் துறையினர் அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும், காயம டைந்த 4 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், வனத்துறையினர் இப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை அருகே ரேக்ளா பந்தயம்
கோவை, நவ.19- ஆனைமலை அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், 400க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. நாட்டு மாடுகள் குறித்து விவசாயிகளிடமும், கால்நடை வளர்ப்பவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ள அங்கல குறிச்சி கிராமத்தில் விவசாய நண்பர்கள் சார்பில் 3 ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், நெக மம், கிணத்துக்கிடவு, திருப்பூர் மாவட்டம், உடுமலை, தாரா புரம், செஞ்சேரி மலை, பல்லடம், திண்டுக்கல் மாவட்டத்தின் பழநி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தின் கொழிஞ்சாம்பாறை, சித்தூர், பகுதிகளில் இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டி களில் இளைஞர்கள் கலந்து கொண்டனர். 200மீ, 300மீ என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காங்கயம் இன காளைகள் மற்றும் லம்பாடி காளைகள் அதிகளவில் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர் களுக்கு தங்கக்காசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப் பட்டன. போட்டியில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளை களை, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பார்வையா ளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
தொடர் திருட்டு: வாலிபர் கைது
உதகை, நவ.19- தலைகுந்தா அருகே உறவினர் வீடுகளில் தொடர் திருட் டில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், தலைகுந்தா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் சமீபகாலமாக அவருடைய உறவினர் வீடுகளில் மட்டும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள் ளார். உறவினர் என்பதாலும், சிறிய தொகை என்பதாலும் பெரும்பாலானவர்கள் புகார் கொடுக்காமல் அவருக்கு அறி வுரை கூறி வந்தனர். ஆனாலும், அவர் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததால், உள்ளூரில் வசிக்க உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் வேலைக்காக மைசூர் சென்றார். இந்நிலையில், ஊருக்கு வந்த ரமேஷ், பட்டர் கம் பையில் உள்ள தூரத்து உறவினர் தேவி என்பவரின் வீட்டுக்கு தீபாவளிக்கு முதல் நாள் நலம் விசாரிக்க சென்றுள்ளார். இதற்கிடையே தீபாவளி தினத்தன்று தேவி குடும்பத்தினரு டன் வெளியில் சென்ற சமயம் பார்த்து, ரமேஷ் வீடு புகுந்து 4 கிராம் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு மீண்டும் மைசூர் சென்று விட்டார். இதுகுறித்து தேவி கொடுத்த புகாரின் பேரில், புதுமந்து காவல் ஆய்வாளர் மணிக்குமார், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையி லான போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்த னர். இதன்பின் அவரை உதகை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
கோவை, நவ.19- வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரம், வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு பின்புறம் உள்ள கோவை - கேரளா செல்லும் ரயில்வே தண்ட வாளம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒரு வர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பந்தையசாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் அர்ஜூன் தலைமையி லான போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட னர். இதன்பின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் கைது
நாமக்கல், நவ.19- குமாரபாளையம் அருகே லாட்டரி சீட்டு மொத்த விற்பனையாளர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக, அரசால் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத் தது. இதனடிப்படையில் போலீசார் குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் குமாரபாளையம் நேதாஜி நகர் பகுதியில் மொத்த லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் நபர் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், வெள்ளைத்தாள்க ளில் எண்களை எழுதி கேரளா மாநில லாட் டரி சீட்டு மொத்த விற்பனையாளர் அங்கப்ப ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான மணி கண்டன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிட மிருந்து எண்கள் எழுதப்பட்ட காகிதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைய டுத்து நடைபெற்ற விசாரணையில், இவர்கள் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போலி லாட்டரி சீட்டுகளை விற் பனை செய்யும் கிளைகளை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும், கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மகனை கொன்ற தந்தைக்கு சிறை
தருமபுரி, நவ.19- தருமபுரி மாவட்டம், பொம்மிடியை அடுத்த பி.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வர் முரளி (42). இவரது மனைவி ஷகிரா. இரு வரும் காதலித்து திருமணம் செய்து கொண் டனர். இவர்களுக்கு சந்தர் (5), லூர்து என்ற 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். குடும் பத்தகராறில் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்த னர். இதையடுத்து இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்தபோது, மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் மனமுடைந்த முரளி, கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக.24 ஆம் தேதியன்று 2 ஆண் குழந்தைகளுக்கும் பூச்சி மருந்து கொடுத்துவிட்டு, முரளியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி சந்தர் உயிரிழந்தார். இது தொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிகட்ட விசாரணை முடிந்து, முரளி குற்றம் செய்தது உறுதி யானது. இதையடுத்து கொலை குற்றத் திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை முயற்சி வழக்கில் 5 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், தற்கொலை முயற்சி வழக்கில் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோனிகா தீர்ப்பு வழங்கி னார்.
பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு
திருப்பூர், நவ.19- நெல் பயிர் காப்பீடு செய்ய நவ.22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் வேளாண்மை இணை இயக்குநர் மாரியப்பன் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விவசாயிகள் தற்போது பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் ராபி கால நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, அவகாசம் முடிந்த நிலையில், பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை. எனவே பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட் டிக்க வேண்டும் என்று ஒன்றிய வேளாண் துறை இணை செயலாளருக்கு, தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் கடி தம் அனுப்பினார். இதையேற்று, ஒன்றிய அரசு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவ.22 அம் தேதி வரை நீட்டித்துள்ளது. சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக் கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், பொது சேவை மையங்களில் நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்க னவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடாக அனுமதி பெற்று இயக்கிய தனியார் பேருந்துக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்
கோவை, நவ.19- முறைகேடாக அனுமதி பெற்று, பத்தினம்திட்டாவில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்ட தனியார் பேருந்துக்கு ரூ.70410 அபராதம் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பேபி கிரீஸ். இவர் ராபின் டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரது பேருந்து ஒன்றுக்கு அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்றுள்ளார். அதன் மூலம் பத்தினம்திட்டாவில் இருந்து கோவைக்கு பேருந்து சேவையை துவங்கினார். கேரள மோட்டார் வாகனத்துறை இதற்கு அனுமதி மறுத்தது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், முன்பதிவு செய்த பயணிகளை அழைத்து செல்லலாம் என தீர்ப்பு வழங் கப்பட்டது. இதனையடுத்து சனியன்று பத்தினம்திட்டாவிலி ருந்து கோவைக்கு பேருந்து சேவையை ராபின் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கியது. பேருந்து புறப்பட்ட சில நிமிடங் களில் கேரள மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் ராபின் டிராவல்ஸ் பேருந்தை மறித்து அபராதம் விதித்தனர். கேரள மாநில எல்லைக்குள் பல்வேறு இடங்களில் பேருந்து நிறுத் தப்பட்டு மோட்டார் வாகனத்துறை அதிகாரிகளால் தணிக் கைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த பேருந்து தமிழக எல்லைக் குள் வந்தபோது, கந்தேகவுண்டன் சாவடி பகுதியில் டிரா வல்ஸ் பேருந்தை வழிமறித்த தமிழக வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ராபின் டிராவல்ஸ் பேருந்துக்கு ரூ.70410 அபரா தம் விதித்தனர்.
விவசாய நிலத்தில் மலைப்பாம்பு மீட்பு
மேட்டுப்பாளையம், நவ.19- சிறுமுகை அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு, வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை, ஊமப்பாளையம், வச்சினம்பாளையம், பாலப் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடர்ந்த வனப்பகு தியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து, விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. மேலும், ஓடந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை பிரதான விவசாயமாக இருந்து வருகிறது. இந்நிலை யில், ஊமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (52) என்பவருக்கு சொந்தமாக வச்சினம்பாளையம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இங்கு வாழை பயிரிட்டுள்ளார். இந் நிலையில், சனியன்று வழக்கம்போல விவசாய நிலத்திற்கு பணியாட்களை வேலைக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் வேலை செய்வதை பார்ப்பதற்காக வெங்கடேஷ் சென்றுள் ளார். அப்போது, வாழை சருகுகள் நிறைந்த பகுதியில் மலைப் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பணியாட்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சிறுமுகை பாம்பு பிடி வீரர் காஜா மைதீன் ((48) என்பவருக்கு அளித்த தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற அவர் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி லாவகமாக பத்திரமாக மீட்டார். இதனையடுத்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் அறிவுறுத்தலின்படி, பிடிபட்ட மலைப்பாம்பு வச்சினம்பாளையம் அருகில் அடர் வனப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
நீரில் மூழ்கிய தரைப்பாலம்: மக்கள் அவதி
ஈரோடு, நவ.19- அந்தியூர் கொண்டையம்பாளையம் தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள் ளது நகலூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட் பட்ட கொண்டையம்பாளையம், செலம்பன் குட்டை கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு செல்வதென்றால், கொண்டையம்பாளை யம் ஏரிக்குச் செல்லும் நீர் வழி பாதையில் உள்ள தரைவழி பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். ஏரி நிரம்பும் போதெல்லாம் தரைப்பாலமும் மூழ்கி விடும். இதன் காரண மாக இந்த கிராமங்களுக்குச் செல்லும் பாதை யானது துண்டிக்கப்படும். இதனால், சுமார் 8 கிலோமீட்டர் தூரம் இப்பகுதி கிராம மக்கள் சுற்றி வர வேண்டிய சூழல் உள்ளது. இதனிடையே, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கி பணிகளும் தொடங் கப்பட்டன. ஆனால், அவ்வப்போது ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து பாலம் கட்ட தாமதமாகி கொண்டே வந்தது. இந்நிலை யில், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது. முழு கொள் ளளவை எட்டி உள்ள நிலையில், பாலம் தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் சுமார் 3 அடி உயரம் வரை தேங்கி நின்றுள்ளது. இதனால், பொதுமக்கள் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். உடனடியாக இப்பகுதியில் மேம் பாலம் அமைக்கப்பட வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மரக்கன்று நடாமல், நட்டதாக கல்வெட்டு
கோபி, நவ.19- கோபிசெட்டிபாளையம் அருகே சாலையின் இருபுறமும் மரக்கன்று நடமால், மரக்கன்று நட்டதாக கல்வெட்டு வைக் கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் விவசாய பணிகள், பண்ணை குட்டை அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நி லையில், கடந்த ஜூலை மாதம் கணக்கம்பாளையம் முதல் சுண்டக்கரடு வரையில் சாலையின் இருபுறமும் மரக்கன்று நட ரூ.1.79 லட்சம் மதிப்பீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டன. இதில் கணக்கம்பாளையம் ஊராட்சியில், சுண்டகரடு முதல் கொண்டையம்பாளையம் வரை நடைபெற்ற சாலைப் பணி கள் நிறைவுற்றன. ஆனால், சாலையின் இருபுறமும் மரக் கன்றுகள் நடமாலேயே, மரக்கன்று நடப்பட்டுள்ளதாக கல் வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி பொதுமக்களி டையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள் ளது. மேலும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.
கந்தம்பட்டி: இன்று மின்தடை
சேலம், நவ.19- சேலம் மாவட்டம், கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் திங்களன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலம் நகர், நெடுஞ் சாலைநகர், கென்னடிநகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக் கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளை யார்கோவில், சண்முக செட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலை கிரி, புத்தூர், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம் பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய் பட்டி, சர்க்கார் போடிநாயக்கன்பட்டி, கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், ராமகவுண்டனூர் ஆகிய பகுதி களில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல், நவ.19- நாமக்கல் கோட்ட அளவி லான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாமக் கல் உட்கோட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்த மங்கலம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிக ளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. நாமக் கல் வருவாய் கோட்டாட்சி யர் தலைமையில், செவ்வா யன்று (நாளை) காலை 10 மணிக்கு நடைபெற உள் ளது என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.