திருப்பூர், பிப்.17- எம்சாண்ட் மணலை ஏற்றிச் செல்லும் லாரிகளை மறித்து பணம் கேட்டு மிரட்டும் கும்பல் மீது நடவ டிக்கை எடுக்காவிட்டால், விரை வில் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள் ளனர். திருப்பூர் மாவட்டத்திற்குட் பட்ட பொங்கலூர், குண்டடம், தாரா புரம், அவிநாசிபாளையம், பெருந் தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. இந்த லாரி களில், கிராவல் மண், மணல் எம் சாண்ட் ஆகியவற்றை விற்பனைக் காக கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், இந்த லாரி உரிமை யாளர்களை சிலர் மிரட்டி யூனிட் ஒன்றுக்கு 400 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், கொடுக்கா விட்டால் அதிகாரிகளை வைத்து லாரிகளை பறிமுதல் செய்வோம் என மிரட்டி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்த குற்றச்சாட்டு எழுந்து வரு கிறது. இந்நிலையில் வியாழனன்று குண்டடம் அருகே வேங்கி பாளையம் கிராமத்தை சேர்ந்த லோகு என்பவர் தனது விவசாய நிலத்தினை சமன்படுத்த கிராவல் மண் எடுத்த போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டிள்ளனர்.
இந்த கும்பலை அங்குள்ள விவசாயி கள் பிடித்துள்ளனர். மேலும், அவர்கள் வந்த காரை பரிசோதனை செய்ததில் அரிவாள் மற்றும் உருட்டைகளோடு வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து ஊதியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆயுதங்களோடு வந்த ஆறு பேரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அடியாட்களின் அட்டூழியத்தால் தொடர்ந்து பாதிக் கப்படுவதாக லாரி உரிமையா ளர்கள் சங்கத்தின் அவசர ஆலோ சனைக் கூட்டம் கொடுவாயில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் வெள்ளியன்று நடை பெற்றது. இதில், இரண்டு ஆண்டு களாக பணம் கேட்டு மிரட்டும் புதுக் கோட்டையை சேர்ந்த கும்பல் மீது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள சட்டப்படி யூனிட் ஒன்றுக்கு 400 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என சட்டம் ஏதாவது உள்ளதா என்பதை தெளிவு படுத்த வேண்டும். தொடர்ச்சியாக லாரி உரிமையாளர் களை மிரட்டி வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஓரிரு நாட்களில் லாரி உரிமை யாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப் படும் என கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித் தனர்.