districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கல்குவாரி அனுமதி: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

நாமக்கல், ஜன.17- நாமக்கல் மாவட்டத்தில் கல்குவாரிகள் அனுமதிக்கான கருத்து கேட்புக் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அழைப்பு விடுத்துள்ளார்.  திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட அக்காலம்பட்டி கிராமத்தில் செல்வராசு குவாரி என்ற நிறுவனத்துக்கு சாதாரண கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக  பிப். 9ஆம் தேதி காலை 10.30 மணி அளவில்  நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. அதே நாளில் மாலை 3 மணி அளவில் சிவகுமார்  குவாரி, பி.ஏ. ராஜா குவாரி, ராமாயி குவாரி, ம.பழனிசாமி  குவாரி ஆகிய நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்குவது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்குறிய நாளில் பொதுமக்கள் பங்கேற்று தங்க ளுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. 

பள்ளி நுழைவாயிலை சேதப்படுத்திய காட்டுயானை

உதகை, ஜன.17- குன்னூர் அருகே உள்ள பள்ளி நுழைவு வாயிலை காட்டு யானைகள் உடைத்து  சேதப்படுத்தின. இதையடுத்து யானை களை வனப்பகுதிக்குள் விரட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங் களின் நடுவே பலா மரங்கள் உள்ளன. பலாப்பழ சீசன் நிலவும் போது, அதனை சுவைக்க சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிடுவது வழக்கமாக இருந்து வரு கிறது. அவ்வப்போது யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து செல்வதும், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வரு கின்றன. குன்னூர் பகுதியில் கடந்த ஒரு மாத மாக குட்டியுடன் 9 காட்டு யானைகள் முகா மிட்டுள்ளன. அவை தேயிலை தோட்டங்கள்,  குடியிருப்பு பகுதிகளில் பகல் மற்றும் இரவு  நேரங்களில் உலா வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் தனிக்குழு அமைத்து யானைகளை கண்காணித்து, வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், காட்டு யானைகள் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள ட்ரூக் எஸ்டேட் தனியார் குடியிருப்பு பகுதிக் குள் 9 காட்டு யானைகள் புகுந்தன. அங்குள்ள அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியின் நுழைவுவாயிலை உடைத்து சேதப்படுத்தி வளாகத்தில் நுழைந்தன. மேலும், அப்பகுதியில் உள்ள ரேசன் கடை யும் காட்டு யானைகளால் சேதமடைந் துள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள்  இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறு கையில், 9 காட்டு யானைகள் தொடர்ந்து  குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வரு கின்றன. எனவே, வனத்துறை ஊழியர்களை கூடுதலாக யானைகள் விரட்டும் பணியில் ஈடுபடுத்தி, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், என்றனர். அதேசமயம் காட்டுயானைகள் நட மாட்டம் காரணமாக குன்னூர் - மேட்டுப் பாளையம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். சாலையில் யானைகள் நின்றால் தொந்தரவு  செய்யக்கூடாது. அவை சாலையை கடந்து  சென்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவு றுத்தியுள்ளனர்.

இளம்பெண் தற்கொலை

கோவை, ஜன.17- கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த  ஆனைமலை ஒடைய குளத்தை சேர்ந்தவர் கருப்பு சாமி (40). இவரது மனைவி  சித்ரா (36). இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. இத்தம்பதியின ருக்கு ஒரு மகள், 2 மகன்கள்  உள்ளனர். சித்ராவிற்கு குடிப் பழக்கம் உள்ளதாக கூறப் படுகிறது. கணவன் - மனைவி  இருவரும் அடிக்கடி மது குடித்து வந்தனர். இந்நிலையில், கணவன் - மனைவி இருவரும் வீட்டில் மது குடித்தனர். அப் போது திடீரென இருவ ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் கருப்பு சாமி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று அருகில் உள்ள மோட்டார் அறையில் படுத்து தூங்கினார். இதனால் மன வேதனையடைந்த சித்ரா  வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண் டார்.இச்சம்பவம் குறித்து  ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடையை மீறி மது விற்பனை - 76 பேர் கைது

கோவை, ஜன.17- திருவள்ளுவர் தினமான திங்க ளன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் தடையை மீறி மதுபாட் டில்கள் விற்ற 76 பேரை காவல் துறை யினர் கைது செய்து, அவர்களிடமிருந்து  மதுபாட்டில்களை பறிமுதல் செய் தனர். திருவள்ளுவர் தினமான திங்க ளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டது. இதனை மீறி  மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற் பனை செய்தால் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட  நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப் பட்டிருந்தது. இதனிடையே கோவை  மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மாக மது பாட்டில்கள் பதுக்கி  வைத்து விற்பனை செய்யப்படு கிறதா? என போலீசார் ரோந்து சென்று  கண்காணித்தனர். புறநகர் மாவட் டத்தில் பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய சப் – டிவிசன் காவல் நிலையங் களுக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப் பகுதிகளில் தடையை மீறி மது விற் பனை செய்ததாக மொத்தம் 62 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டது. மேலும், 62 பேர் கைது செய்யப்பட்டு, அவர் களிடமிருந்து 801 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கோவை மாநகர காவல்  நிலையத்துக்குட்பட்ட பிள்ளையார் புரம், குனியமுத்தூர், போத்தனூர்,  சுந்தராபுரம், காட்டூர், இடையர் பாளையம், இருகூர்,கோவைப்புதூர், நஞ்சுண்டாபுரம், காந்திபுரம், கிராஸ் கட் ரோடு, ஈச்சனாரி உள்ளிட்ட பகுதி களில் போலீசார் நடத்திய சோதனை யில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  14 பேர் கைது செய்யப்பட்டனர். இதை யடுத்து கைது செய்யப்பட்டவர்களி டமிருந்து 192 மது பாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழு வதும் திங்களன்று மொத்தமாக 76  பேர் கைது செய்யப்பட்டு, 993 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறது சுற்றுலாத்துறை

அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேட்டி

உதகை, ஜன.17- தமிழ்நாடு சுற்றுலாத்துறை கொரோ னாவிலிருந்து மீண்டு வருகிறது என உதகையில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக உதகையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழரின்  பண்பாடு, கலாச்சாரத்தை கடை பிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில்  சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கலைப்பண்பாட்டு துறை சார்பில் 2 நாட் களுக்கு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது. மேலும் பரதநாட்டியம், சிலம்பாட்டம், பறை சாற்றுதல், குச்சிபிடியாட்டம், கர காட்டம் உள்ளிட்ட அனைத்து கலை களையும், நாட்டுப்புறக் கலைஞர் களையும் வளர்க்கும் நோக்கத்தில் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அனைத்துத் துறை களையும் சிறந்த துறைகளாக கொண்டு  வர முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறார். இந்தியா அளவில் தமிழ்நாடு சுற்று லாத்துறை முதன்மையான இடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் 2019-20  ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. தமிழ்நாட்டிற்கு கடந்த 2021  ஆம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற் பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி களும், 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது மிகப்பெரிய வளர்ச்சி. சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் வசதி, போக்குவரத்து வசதி, சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறோம், என்றார்.

காங்கேயத்தில் சமத்துவ பொங்கல்

திருப்பூர், ஜன. 17 - காங்கயத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா  நடைபெற் றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் அ.பிரபு  செபாஸ்டியன் தலைமை வகித்தார். காங்கேயம் நகர மன்ற உறுப்பினர் மீனாட்சி அண்ணாதுரை, தமிழ் கலை இலக்கிய ஆர்வலர் காங்கயம் அ. மாணிக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொரு ளாளர் என்.நவீன், “தமிழ் ஓசை நமச்சிவாயம்” வள்ளலார்  மன்றம் சேகர், மௌனம் பாடசாலை ரம்யா, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி, விவ சாய சங்கத் தலைவர் தேவராஜ், பகத்சிங் கற்றல் மையம்  தங்கவேலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் ஒற் றுமை சமத்துவ பொங்கலை, எம்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை காங்கேயம் முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் க.காளியப்பன் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். விளையாட்டுப் போட்டிகளை, டிஎன்எஸ்டிசி-யின் ஓய்வுபெற்ற ஊழியர்  சங்கத்தின் ஈரோடு மண்டல தலைவர் ஆர்.நாச்சிமுத்து தொடங்கி வைத்தார். விழாவிற்கு வருகை தந்திருந்த அனை வரையும், மாணவர் சங்கத்தின் ஆர்.எஸ்.ஜனார்த்தனன் வர வேற்றார். விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிக ளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட  துணைத்தலைவர் சீரங்கராயர், காங்கேயம் கைத்தறித் தொழிலா ளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.ராமநாதன் ஆகியோர் பரிசு  வழங்கி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற மண் மத்தளக் கலைஞர்  ஆசான் காங்கயம் துரை கலைக் குழுவினரின் சலங்கை ஆட் டம், பறையாட்டம், சிலம்பாட்டம், மற்றும் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன் சிறப் புரை ஆற்றினார். நிறைவாக சௌமியன் நன்றி கூறினார். விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

பி.டி.ஆர் நகரில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா உற்சாகம்

திருப்பூர், ஜன.17- திருப்பூர், வேலம்பாளையம் நகரத்திற்குட்பட்ட பி.டி. ஆர் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்  மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா நடத்தப் பட்டது. விழா தொடக்கத்தில் பெண்களுக்கான கோலப்போட்டி  நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுவர் சிறுமியர் மற்றும்  இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. ஸ்லோ சைக்கிள் போட்டியை மாமன்ற உறுப்பினர்  தங்கராஜ் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின்  நகர செயலாளர் நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர்  சின்னச்சாமி பங்கேற்று வாழ்த்தினர். இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் வேலம்பாளையம் நகரத் தலைவர் ரகுபதி  கொடியேற்றி வைத்தார். வடக்கு நகர கமிட்டி ராஜேந்திரன்,  வாலிபர் சங்க பொருளாளர் கீர்த்தி வாசன் மற்றும் விவேக்,  சரத், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.பி.சுப்பிரமணி யம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கோலப் போட்டி நடுவர்களாக அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்க மாவட்ட தலைவர் பவித்ரா தேவி, வேலம்பாளை யம் நகர செயலாளர் ஆர்.கவிதா, மாதர் சங்க நகர தலைவர்  அழகு மற்றும் பொருளாளர் சாந்தி கலந்து கொண்டார் கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்  செ.முத்துக்கண்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆர்.காளி யப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட  தலைவர் எஸ்.அருள், வேலம்பாளையம் நகர செயலாளர்   வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா  நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகர குழு உறுப்பினரும், பி.டி.ஆர் நகர் குடியிருப்போர் நல  சங்க செயலாளருமான டி.நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் சுந்தர்ராஜ் சிவக்குமார் வேலுச்சாமி உள்பட வாலிபர் சங் கத்தினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

சாலை விபத்தில் பெண் பலி

திருப்பூர், ஜன.17- திருப்பூர் மாவட்டம், அவிநாசி தெக்கலூர், ஏரிப்பாளையத் தைச் சேர்ந்தவர் முருகன் (33). லாரி ஓட்டுநரான இவரது மனைவி தீபா (28). இவர்களது குழந்தைகள் கிரிராஜன், தர்ஷினி. இவர்கள் நான்கு பேரும் முருகனின் சொந்த ஊரான  திருச்சி மாவட்டம், துறையூருக்கு ஞாயிறன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். காங்கயம் - வெள் ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் பச்சாபாளையம் பிரிவு அருகே சென்றபோது திடீரென நிலை  தடுமாறி கீழே விழுந்தனர். இதில், தீபா பலத்த காயம டைந்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இந்நிலையில் அவர் திங்களன்று உயிரிழந் தார்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:45.74/60அடி  நீர்வரத்து:829கன அடி வெளியேற்றம்:1023கன அடி  அமராவதி அணை  நீர்மட்டம்: 82.55/90அடி. நீர்வரத்து:199கனஅடி வெளியேற்றம்:910கன அடி

இருசக்கர வாகன விபத்து மூன்று பேர் பலி

திருப்பூர், ஜன. 17 - உடுமலையிலிருந்து பழனி செல்லும் சாலையில் மைவாடி பிரிவு என்ற இடத் தில் இரண்டு இருசக்கர வாக னங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பலி  ஆனார்கள். சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் (31),  திண்டுக்கல் மாவட்டம் பழ னியை சேர்ந்த கதிரேசன் (22) இருவரும் உடுமலையில் இருந்து பழனி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது போளரப்பட்டியை சேர்ந்த பாலச்சந்தர் (35) எதிரே உடு மலை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டி ருந்தார். மைவாடி பிரிவு அருகே எதிர்பாராத வித மாக இவர்கள் பயணித்த இரண்டு இருசக்கர வாகனம்  நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் படுகா யம் அடைந்த மூன்று பேரும்  பரிதாபமாக உயிரிழந்தனர்.  

முறையாக குடிநீர் வழங்கக்கோரி மறியல்

ஈரோடு, ஜன.17- அந்தியூர் அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், கெட்டி சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிருஷ்ணாபுரம். இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்தியூர் -  பர்கூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி அலுவ லகத்திற்கு திங்களன்று வந்தனர். இதன்பின் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் விநி யோகிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான காவல்  துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர் களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையினர், இப்பிரச்சனை சம்பந்த மாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, குடி நீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏடிஎம் மையத்தில் பேட்டரிகள் திருட்டு 

பள்ளிபாளையம் ஜன.17- தனியார் ஏடிஎம் மையத்தில் இருந்த பேட்டரிகள் திருட்டு  போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ராஜாஜி நகர் பகுதி அருகே, தனியார் ஏடிஎம் மையம் உள் ளது. இந்நிலையில், சுமார் 35-வயது உடைய வாலிபர் ஒருவர், ஏடிஎம் மையத்தின் உள்ளே சென்று அங்கே இயந்திரத்திற்கு பயன்படுத்தும், இரண்டு பேட்டரிகளை திருடி சென்றுள்ளார். வங்கியின் பணியாளர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது, ஒரு நபர் பேட்டரிகளை எந்த பதட்டமும் இல்லா மல், லாவகமாக திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளத் தில் வைரலாக பரவி  வருகிறது.  வீடியோ காட்சிகளை அடிப் படையாக வைத்து, பள்ளிபாளையம் போலீசார் சம்பந்தப் பட்ட நபர் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர். ஏடிஎம் மையத்தின் உள்ளே உள்ள அறைக்கு சென்று பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரேசன் கடையில் 2 கிலோ ராகி: ஆட்சியர் தகவல்

தருமபுரி, ஜன.17- பொது விநியோக திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் மாதந்தோறும் ஒரு  குடும்பத்திற்கு 2 கிலோ ராகி வழங்கப்படும் என தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி தெரி வித்துள்ளார். தருமபுரி மதிகோன்பாளையத்தில் உள்ள மாவட்ட வேளாண்மை ஒழுங்கு முறை விற் பனை கூட வளாகத்தில் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வ தற்காகவும், நேரடியாக ராகி கொள்முதல் செய்வதற்காகவும் மாவட்ட அளவில் அமைக் கப்பட்டுள்ள வழிகாட்டு குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை தாங்கினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறு கையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநி யோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாது காப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கப் படும். இதனால் சிறு, குறு விவசாயிகள் நேரடி யாக ராகி கொள்முதல் நிலையத்திற்கு சென்று பட்டா மற்றும் அடங்கல் ஆவணங் களுடன் இணைய வழி மூலமாக தங்கள் விவ ரங்களை பதிவேற்றம் செய்து ராகியை விற் பனை செய்து பயன்பெறலாம். விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த ராகிக்கு உண் டான தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். சிறு, குறு விவசாயிகள் ராகி  விற்பனை செய்வது தொடர்பான தங்களின் சந்தேகங்களை இதற்காக நியமிக்கப்பட் டுள்ள வட்டார வேளாண்மை அலுவலர்கள் மூலம் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய லாம். அதன்படி வட்டார வாரியாக தருமபுரி-ரேவதி, நல்லம்பள்ளி-இளங்கோவன், பாலக் கோடு-மணிவண்ணன், காரிமங்கலம்-கனக ராஜ், பென்னாகரம்-அன்பரசு, அரூர்-குமார், மொரப்பூர்-ராஜேஸ்வரி, பாப்பிரெட்டிப் பட்டி-ஜீவகலா ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளதாக தெரிவித்தார்.

சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள்: வெறிச்சோடிய கோவை

கோவை, ஜன.17- பொங்கல் பண்டிகையை கொண் டாட சொந்த ஊர் சென்ற தொழிலா ளர்களால், தொழில் நகரமான கோவை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ் டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ் டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண் டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற் சாலைகள் என சுமார் 60 சதவிகிதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களி லும், 40 சதவிகிதம் தொழிற்சாலை கள் நகர்புறங்களிலும் செயல்படுகின் றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி  சுமார் 325 பெரிய தொழில் நிறுவ னங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறு வனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில்  நிறுவனங்களில் சுமார் 5 லட்சத்திற் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். சிறு குறுந் தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில் நிறு வனங்களில் ஒரு லட்சத்திற்கும் அதி கமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக் கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயா ரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயா ரிக்க தேவைப்படும் பொருட்கள் தயா ரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள எந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட் டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று வரு கின்றனர். அதேபோன்று கோவை ராஜா வீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, செட்டி வீதி, அசோக் நகர், அய்யப்பா  நகர், செல்வபுரம், சலீவன் வீதி, காந்தி பார்க், சாய்பாபா காலனி, கிராஸ்கட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 25  ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட் டறைகளும், நகை தயாரிப்பு தொழிற் சாலைகளும் உள்ளன. இதில், 2 லட் சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் மறைமுகமாகவும், நேரடியாக வும் பணியாற்றி வருகின்றனர். இதே போன்று கோவை மாவட்டத்தில் ஜவுளி தொழில் நிறுவனங்கள், நூற்பாலை கள், விசைத்தறி கூடங்கள் என ஏராள மான தொழில் நிறுவனங்கள் உள் ளன. இதில் லட்சக்கணக்கான உள் ளூர் மற்றும் பிற மாவட்ட, மாநில  தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இதுதவிர ஐடி நிறுவனங் கள், கட்டுமான நிறுவனங்கள், இதர அலுவலகங்கள் என பல ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சுமார் 5  லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொங் கலையொட்டி சொந்த ஊர் சென்ற னர். அதேசமயம் உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த தொழி லாளர்கள் பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்று விட்டனர். கட்டு மானம், ரயில்வே பொருட்கள் உற் பத்தி, இரும்பு நிறுவனங்கள், காஸ் டிங் நிறுவனம், ஏற்றுமதி நிறுவனங் களில் வடமாநில தொழிலாளர்கள் போல் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் அதிக ளவு வேலை செய்து வருகின்றனர்.  கோவையில் இருந்து ரயில்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ள னர். இதனால், கோவை மாவட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், உணவகங் கள், கடைகள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 23 புதிய பயிர் ரகங்கள் வேளாண் பல்கலை., துணைவேந்தர் தகவல்

கோவை, ஜன.17- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் நடப் பாண்டில் 23 வகையான புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட வுள்ளதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது. பண்ணை வளாகத்தில் மஞ்சள், தயிர், பால், கஞ்சி, பன்னீர், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகைகள் கரைக்கப் பட்டு பட்டி அமைத்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட மாடுகளை பட்டியை மிதிக்க வைத்து கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடை பெற்றது. இதன்பின் பண்ணை தொழிலாளர்களுக்கு புத் த்தாடை வழங்கப்பட்டது.  அப்போது பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு நெல் பயி ரில் 4 ரகங்கள் வெளியிட உள்ளோம். சம்பா பருவத்திற்கு ஏற்ற  சன்ன ரகம் அரிசி ஒன்றும், தாளடிப்பட்டத்துக்கான அரிசி, எப்போகமும் விளையும் கவுனி அரிசி, புதிய ரக எள், சிறு தானிய ஆண்டை முன்னிட்டு புதிய ரக மக்காச்சோளம், முதல் முறையாக 4 மரப்பயிர்கள், பசுந்தாள் உரம் என 23 வகையான புதிய ரக பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர் பாக அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய ரக பயிர்கள் வரும் வாரத்தில் வெளியிடப்படும், என்றார்.

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் 1.63 லட்சம் பேரிடம் ரூ.11.33 கோடி அபராதம்

கோவை, ஜன.17- முறைகேடுகளை தவிர்க்க பயணச்சீட்டு பரிசோதகர் குழுவினர் அவ்வப்போது ரயில்களில் பரிசோதனை மேற் கொண்டு வருகின்றனர். இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் டிசம் பர் வரை ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 1.63 லட்சம் பேரிடம் ரூ.11.33 கோடி அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது. கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட அபராத தொகை யைவிட இது 61.18 சதவிகிதம் அதிகமாகும். மேலும், அனும தியை மீறி பயணித்த 17 ஆயிரத்து 770 பேரிடமிருந்து ரூ.89.76  லட்சமும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான சுமை எடுத்துவந்த மற்றும் சுமை முன்பதிவு செய்யாத 432  பேரிடம் இருந்து ரூ.2.74 லட்சமும் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.

இறைச்சி கடைகளில் நீண்ட வரிசை

நாமக்கல், ஜன.17- கறிநாளையொட்டி, இறைச்சி கடைகளில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங் கிச் சென்றனர். பொங்கல் பண்டிகை யில், கறிநாள் கொண்டாடப் படுகிறது. இதில், பெரும்பா லான வீடுகளிலும் அசைவ  உணவு இடம் பெறுவது வழக் கம். நாமக்கல், ராசிபுரத்தில் செவ்வாயன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட  இறைச்சி வாங்குவதற்காக காத்திருந்தனர். குறிப்பாக, ராசிபுரம், பெரியசாமி கடை  ஆகிய பகுதிகளில் பொதுமக் கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து இறைச்சி வாங்கி சென்றனர்.