districts

img

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி

திருப்பூர், பிப்.11- திருப்பூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பா ளர்கள் பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தும் பணி வெள்ளியன்று நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி வெள்ளி யன்று மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் முதல் மற்றும் நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளுக்கான தேர்தலுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதேபோல் இரண்டு மற்றும் மூன்றாவது மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர், சின்னம் பொருத்தும் பணி அந்தந்த மண்டல அலுவலகங்களில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.