கோவை, செப்.20- கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 57 மசாஜ் சென்டர் கள் மூடப்பட்டுளளதாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுக ளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்து பாலியல் வணிக தொழிலில் ஈடுபடுத்த பெண்களை அழைத்து வந்த சம்பவம் கோவையில் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதுதொடர் பாக சிக்கந்தர் பாஷா, அவருடைய கூட்டாளி ஸ்டீபன் ராஜ் ஆகியோரை கோவை மாநகர காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். அவர்க ளிடம் நடந்த விசாரணையில் பல் வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தது. இவரிடம் மாமூல் பெற்ற நபர் கள் தொடர்பில் இருந்த நபர்கள் வாட்ஸ் அப் மூலமாக போட்டோ அனுப்பி இளம் பெண்களுடன் ஹோட்டலில் தங்கிய பிரபலங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், பாலியல் வணிகத்திற்காக கும்பலை வழி நடத்திய சிக்கந்தர் பாஷா, அவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர். சிக்கந்தர் பாஷாவிடம் 16 செல்போன்கள் இருந் தன. அந்த செல்போன்களை அவரது கூட்டாளிகள் சிலர் பயன்படுத்துவ தாக தெரிகிறது. காவல் துறைக்கு பயந்து அவர்கள் தலைமறைவாகி யுள்ளனர். பெங்களூரு, மும்பை, ஹைத ராபாத் உள்ளட்பட பல்வேறு நகரங்க ளில் இருந்து அவர்கள் வாடிக்கை யாளர்களுக்கு பெண்களின் விவரங் களை அனுப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கோவை நகருக்குள் வருவதில்லை. ஆனால் வெளிமாநி லத்தில் தங்கி விவரங்களை அனுப்பி ஆன்லைன் மூலம் பணம் வாங்கி இளம் பெண்களை ஓட்டலுக்கு அனுப்பி பாலியல் தொழில் செய்கின்றனர். இந்த கும்பல் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டல்களை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கும்பலில் 4 முதல் 6 பேர் இருக் கலாம். இவர்களை பிடிக்க காவல் துறை தீவிரம் காட்டி வருகின்றனர். நகரில் மசாஜ் சென்டர், ஸ்பா போன்ற வற்றில் இதுபோன்ற பாலியல் வணி கம் செய்வதை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு உள்ளனர். மேலும் இதனை தடுக்க தேவையான முயற்சிகள் எடுக் கப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக நகரில் செயல்பட்ட 57 மசாஜ் சென்டர் கள் இதுவரை மூடப்பட்டுள்ளன, என்றார்.