districts

img

தணிக்கை என ஊதியத்தைக் குறைப்பதை எதிர்த்து உள்ளாட்சி பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், செப். 28 – திருப்பூர் மாவட்டத்தில் மேல்நிலை  நீர்த்தேக்கத்தொட்டி இயக்குவோ ருக்கு தணிக்கை ஆட்சேபனை என  ஊதியத்தை குறைக்காமல் ஒரே மாதிரி  ஊதியம் நிர்ணயிக்க வலியுறுத்தி சிஐ டியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை  ஊழியர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூா் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐ டியு) தலைமையில் நடைபெற்ற இந்தப்  போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் பி.பழனிசாமி தலைமை  வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலைவர்கள் கே.உண்ணிகி ருஷ்ணன், பி.பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.  ஓடிடி எனப்படும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு  தணிக்கை ஆட்சேபனை என ஊதியத் தைக் குறைக்காமல் ஒரேமாதிரி ஊதி யத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும்.  2000 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதிக்குப்  பின்னர் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழுவின்படி ஊதி யத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ண யித்து நிலுவைத் தொகையுடன் வழங்க  வேண்டும். 2013க்கு முன் பணியமா்த்தப் பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கும் அரசாணையின்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு  பெற்ற மேல்நிலைத்தொட்டி இயக்கு பவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதி யத்தை வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவ தும் இருந்து பெருந்திரளான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.