திருப்பூர் மாவட்டம், தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்களுக்கு முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 16 ஆவது வார்டு உறுப்பினர் செல்வன், 17 ஆவது வார்டு உறுப்பினர் வாணிஸ்வரி ஆகியோர் சென்னையில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.