districts

img

வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு

தருமபுரி, பிப்.20- ஜாக்டோ – ஜியோ சார்பில் வாழ் வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு ஞாயிறன்று பல்வேறு மாவட் டங்களில் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டதை உட னடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரி யர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ஆகிய வற்றை உடனடியாக வழங்க வேண் டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத் தில் பணிபுரிபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகி யோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான “வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு” பல்வேறு இடங்களில் நடைபெற் றது. தருமபுரி பெரியார் மன்றத்தில் ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.சுருளிநாதன் தலைமையில் மாநாடு நடைபெற் றது. அரசு ஊழியர் சங்க  மாநில துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட நிர்வாகி கள் கே.புகழேந்தி, ஜெயவேல், குண சேகரன், சி.காவேரி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட செய லாளர் ப.சங்கர் ஆகியோர் உரை யாற்றினர். இதில், தமிழ்நாடு ஆசிரி யர் முன்னேற்ற சங்க மாவட்ட தலை வர் பி.எம்.கெளரன், தமிழ்நாடு அரசு  பணியாளர் சங்க மாவட்ட தலைவர்  கே.பாஸ்கரன், தமிழக ஆசிரியர் கழக மாநில இணைச்செயலாளர் இராச. ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில், சிஐடியு மாநிலச்  செயலாளர் சி.நாகராசன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.மணி. தொடக் கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில  பொதுச்செயலாளர் காமராசு, தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநி லத் தலைவர் கு.தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச. விஜயமனோகரன், பி.எஸ்.வீரா கார்த்திக், அ.மதியழகன், பி.சரண வன், அ.ஆறுமுகம் ஆகியோர் தலை மையில் மாநாடு நடைபெற்றது. இதில், ஜாக்டோ-ஜியோ உறுப்பு சங் கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகி கள் கருத்துரையாற்றினர். மாநில ஒருங் கிணைப்பாளர் அ.சங்கர் சிறப்புரை யாற்றினார். எம்.ஆர்.ரஜிக்குமார் நன்றி கூறினார்.

கோவை

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப் வளாகத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் மாவட்ட செயலா ளர் அரசு தலைமையில் மாநாடு நடை பெற்றது. மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.சிவக்குமார் வரவேற்புரையாற் றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநி லத் தலைவர் ச.ஜெகநாதன் மற்றும்  ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகி யோர் கோரிக்கை விளக்கவுரை யாற்றினர். இதில், முதுகலை பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலா ளர் தா.ஆனந்த், ஆசிரியர் கூட்டணி யின் ஒருங்கினைப்பாளர் வெ.சம்பத் குமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாள ரும், பொதுச்செயலாளருமான வி. எஸ்.முத்துசாமி ஆகியோர் உரை யாற்றினர். இறுதியில், தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சு.ரமேஷ் நன்றி  கூறினார்.