பள்ளிபாளையம், ஜன.6- நாமக்கல் அருகில் உள்ள காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் விடும் நிகழ்வு வெள்ளியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை ஆற்றில் விடும் நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு, நாட்டின மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டார். இதையடுத்து அவர் தெரிவித்தாவது, தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாது காத்து பெருக்கிட ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022 – 2023 ஆம் ஆண்டில் 40 லட்சம் மீன் குஞ்சுகள் ரூ.1.24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. இத் திட்டத்தால் ஆறுகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை கணிசமாக அதிகரித்திட முடியும். தமிழ்நாட்டின் ஆறு களில் பெரும்பாலான இயற்கை வகையான மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிடாமல் பாது காத்துப் பெருக்கி, அவற்றை அடுத்ததலைமுறைக ளுக்கும் எடுத்து சென்றிட இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் உயிரி னங்களின் உயிர் சம நிலையை பாதுகாத்திட முடியும். நாட்டின மீன்வளத்தினைப் பாது காத்திட, இனப்பெருக்கம் செய்து மீன்குஞ்சு களை ஆறுகளில் இருப்பு செய்யப்படு கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சேவல்கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டைகள் ஆகிய மீன்குஞ்களின் பிழைப்புத்திறன் வெகுவாக அதிகரித்து விடும். இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள், மீன் விரலிகளாக 80 மி.மீ முதல் 100 மி.மீ அளவில் வளர்த்தெடுக்கப்பட்டு காவிரி ஆற்றில் 1.70 இலட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட் டுள்ளது என தெரிவித்தார்.