சென்னை, மே 20- கவிதை உறவு இலக்கிய அமைப் பின் 51 ஆவது ஆண்டு விழா சென்னை தி.நகரில் நடந்தது. விழாவுக்கு வேலூர் விஐடி வேந் தரும், தமிழியக்கம் தலைவருமான முனைவர் கோ.விஸ்வநாதன் தமது தலைமை உரையில், “இந்தியா பொரு ளாதார வளர்ச்சி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். எழுத்தாளர்கள் துணிச்சலாக எழுதி, சமுதாய மேம்பாட்டுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். விழா மலரை நல்லி குப்புசாமி செட்டி யார் வெளியிட, வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொண்டார். கவிஞர் ஏர்வாடி ராதா கிருஷ்ணன் எழுதிய, ‘யாவரும் கேளிர்’ என்ற நூலை விஜய.ராஜ மூர்த்தி வெளியிட எவர்வின் பள்ளி களின் குழுமத் தலைவர் புருசோத் தமன் பெற்றுக்கொண்டார். ‘வண்ண மில்லாமல் என்ன வானவில்’ நூலை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் அவ்வை ந.அருள் வெளி யிட சாந்தகுமாரி சிவகடாட்சம் பெற்றுக் கொண்டார். விழாவில் கவிதை உறவு இலக்கி யப் பரிசுகள் வழங்கப்பட்டன. மரபு கவிதை, புதுக்கவிதை, மனித நேயம், வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரை, பொது கட்டுரை, குழந்தை இலக்கியம், நாவல், கல்வி, இளைஞர் நலம், ஆன்மிகம், மத நல்லிணக்கம் ஆகிய பிரிவுகளில் பரிசுகள் வழங்கப் பட்டன. 32 எழுத்தாளர்கள் விருது களைப் பெற்றனர். தூய தமிழ் சொற்கள் விருதுகள் மற்றும் சிறந்த நூல்க ளுக்கான பரிசுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். அப்போது,“ஏர்வாடி ராதா கிருஷ்ணன் வங்கியில் பணி புரிந்தவர். அவர் வங்கிகளில் பயன்படுத்தப்படும் சுமார் 15 ஆயிரம் ஆங்கில சொற்களுக்கு தூய தமிழ் சொற்களை தேர்வு செய்து கலை களஞ்சியம் தயாரித்து கொடுத் துள்ளார். இது நிகரற்ற பணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமுதாயத்தை நெறிப்படுத்தும் இலக்கியங்கள்
நமது தொன்மை கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியங்கள் தான். 2 ஆயிரம், 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய வாழ்வியலை நமக்கு இலக்கியங்கள்தான் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன. தற்போது தான் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் தெரிய தொடங்கி உள்ளன. ஒரு சமுதாயத்தை நெறிப்படுத்தி மேம்படுத்துவதில் இலக்கியங்களுக்குத் தான் முக்கிய பங்கு உள்ளது. இலக்கியங்கள் மேம்பட்டால் தான் சமுதாயமும் மேம்படும் என்றார். ஆங்கில கலப்பு வேதனை ஒவ்வொருவரும் தமிழ் மேம்பாட் டுக்கு பங்களிப்பு செய்கிறார்கள். என்னை போன்றவர்கள் நீதித்துறை யில் வரும் புதியவர்களுக்கு தமிழில் பேச வாய்ப்பு கொடுத்து உற்சாகப் படுத்துகிறோம். என்றாலும் தமிழ் நாட்டை பொது இடங்களிலும், மேடை பேச்சுகளிலும் தமிழ் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவது அதிகரித்து வருகிறது. இன்றைய தலைமுறைக்கு தமிழில் பேசவும் தெரியவில்லை, எழுதவும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் தமிழ் பேசுவதை மேம்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கி றோம். இதற்கு ஆசிரியர்களை நாம் முதலில் தயார்ப்படுத்த வேண்டும். அவர்களுக்கு செம்மொழி கல்லூரி அமைத்து தனிப் பயிற்சி கொடுக்க வேண் டும். அந்த தமிழ் பயிற்சியில் வெற்றி பெறுபவர்களையே தமிழ் ஆசிரியர்க ளாக நியமிக்க வேண்டும். இதற்காக தமிழகத்தை சென்னை, கோவை, நெல்லை அல்லது மதுரை, திருச்சி என்று 4 மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்துக்கு ஒரு செம்மொழி கல்லூரி உருவாக்க வேண்டும். இதை இந்த அரங்கில் இருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் நீதிபதி.