districts

img

இலவச வீட்டு மனைபட்டா கேட்டு: பட்டியலின மக்கள் மனு

தருமபுரி நவ-11,  நல்லூர் கிராம பட்டியலின  மக்கள்  இலவச மனைபட்டா கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தியிடம் மனு  அளித்தனர். இதில், தருமபுரி மாவட்டம் பாலக் கோடு வட்டம் நல்லூர் கிராமத்தில் பட்டி யலின மக்கள் சுமார் 50 க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வருமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு விவசாய நிலம் இல்லை  கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  இவர்களுக்கு சுமார் 30 ஆண்டுக ளுக்கு முன் இந்திரா நினைவு குடியி ருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக் கப்பட்டது. தற்போது சேதமடைந்து மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மோசமான நிலை யில் உள்ள உள்ள அரசு தொகுப்பு வீடு களை பழுது பர்த்து குடியிருந்து வரு கின்றனர். இதில் பலருக்கு திருமணம் நடைபெற்று, வீடு இல்லாமல் ஒரே  வீட்டை தடுத்து இரண்டு மூன்று குடும் பங்களாக குடியிருந்து வருகின்றனர்.  அது போன்று பாலக்கோடு வட்டம் கரிகுட்டனூர் கிராமத்தில் 80 க்கும்  மேற்பட்ட இருளர் பழங்குடி சமூக மக் கள் வசித்து வருகின்றனர். குடிசை  அமைத்து வசித்துவரும் இம்மக்கள் மழை காற்று களில் குடிசை சேதம டைகிறது. பலமுறை மனைபட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத் தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுவரை எங்களுக்கு அரசு  வீடோ அல்லது இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை எனவே எங்கள்  வாழ் நிலையை கணக்கில் கொண்டு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கரி குட்டனூர் மக்கள் மனு அளித்தனர்.