உடுமலை, மார்ச் 26- பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பேருந்து நிறுத்த கட்டடத்தை மதுப் பிரியர்கள் ஆக்கிரமித்து இடையூறு செய்வதால், பேருந்த நிறுந்த கட்ட டத்தில் முள் வைத்து பொதுமக்கள் அடைத்துள்ளனர். உடுமலை அருகே ஆலாம்பா ளையம் ஊராட்சியில் பூசாரிநாயக்கர் குளம் பகுதியில் பவளபுரம் என்ற குடி யிருப்பில் தனியார் ஒருவர் சொந்த செல வில் அனைவரும் பயன்படுத்தும் வகை யில் பயணிகள் நிழற்குடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்ட டத்தில் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்து, அன்றாடம் மது அருந்தும் கூடமாக மாற்றியுள்ளனர். மேலும் மதுபோதையில், அங்கே யே சிறுநீர் கழிப்பது, வாந்தி எடுப்பது என சுகாதாரமற்ற நிலையில் பேருந்து நிறுத்தத்தை மாற்றியுள்ளனர். இது குறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம், காவல்துறையில் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனையடுத்து,
அப்பகுதி மக்கள் முள் வைத்து கட்டடத்தை அடைத்து வைத்து உள்ளார்கள். இது குறித்து பொதுமக்கள் தெரி விக்கையில் உடுமலை, திருமூர்த்தி மலை மற்றும் அமராவதி அணை களுக்கு செல்லவும் பள்ளி குழந்தை கள், வேலைக்கு செல்லும் பலர் இங்கு இருந்து செல்கிறார்கள். பேருந்துகள் வர காலதாமதம் ஏற்பட்டால் மக்கள் நிற்கவும், ஓய்வு எடுக்கவும் தனியார் ஒருவர், அவரின் மகன் நினைவாக அனைவரும் பயன்படும் வகையில் நிழற்குடை கட்டிக்கொடுத்தார். மேலும், அதை வருடத்திற்கு ஒரு முறை சிறப்பாக பராமரித்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக இந்த வழியாக செல்லும் நபர்கள் மது அருத்தும் இடமாக மாற்றி விட்டார்கள். மது அருந்தியவர்கள் பாட்டில் மற்றும் உணவுப் பொருள்களை உள்ளே வீசி விடுவது மட்டும் இல்லாமல் அங்கு வரும் பெண்களை தகாத வார்த்தைகளில் பேசுவதால் வீண் பிரச்சனை ஏற்பட்டு வருகின்றனர். பல முறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆகவே, பேருந்து நிறுத்த கட்டடத்தை முள் வைத்து அடைத்து உள்ளோம் என்றனர். தற்போது, பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கட்டடத்தின் வெளியே நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, காவல்துறையினரின் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு நிழற்குடை கட்டடத்தை கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.