districts

img

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த இழிவை கண்டித்து திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.19- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் அருந்த தியர் இன மக்கள் பயன்படுத்தி வந்த  குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த  சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூரில் விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல், இறையூரில் அருந் ததியர் இன மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட் டியில் சமூக விரோதிகள் மலத்தைக்  கலந்தது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மனித நாகரிகம் வெட்கித் தலை குனியும் வகையில் இந்த இழிசெ யலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய வலி யுறுத்தி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வியாழனன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் வடக்கு  மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், குடி நீரில் மனித மலத்தை கலந்த சாதி  வெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும். வழிபாட்டு தலங் களுக்குள் செல்லக்கூடிய அருந்ததி யின மக்களுக்கு தமிழக அரசு உரிய  பாதுகாப்பு வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர். மண்டல அமைப்பு செயலாளர் சுசி.கலையரசன், கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ், இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச்செயலாளர் துரை வளவன்,  நாடாளுமன்ற தொகுதி துணைச்செய லாளர் முருகானந்தம், காங்கயம் சட் டமன்ற தொகுதி செயலாளர் ஜான்  நாக்ஸ், பல்லடம் சட்டமன்ற தொகுதி  செயலாளர் ரங்கசாமி,  மடத்துக்கு ளம் தொகுதி செயலாளர் ஈஸ்வரன்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கனகராஜ் மற்றும் திருப் பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடு தலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வா கிகள் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.