districts

img

புத்தகங்களுடன் புத்தாண்டை கொண்டாடுவோம்

அவிநாசி, ஜன.1- அவிநாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று புத் தகக் கண்காட்சி துவங்கியது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் அவிநாசி கிளை சார்பில் ஆங் கில புத்தாண்டையொட்டி புத்தக கண் காட்சி தனியார் திருமண மண்டபத்தில் வெள் ளியன்று துவங்கியது. இந்த புத்தகக் கண் காட்சியை மருத்துவர் பிரகாஷ் திறந்து வைத் தார். முதல் விற்பனையை தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து ஆசிரியர் ஜெய லட்சுமி ‘சோளகர் தொட்டி’ என்ற புத்தகத் தையும், ஆசிரியர் ஜெயசித்ரா ‘வன்முறை யில்லா வகுப்பறை’ என்ற புத்தகத்தையும் அறிமுகம் செய்து பேசினர். எழுத்தாளர் கரீம்  ‘புத்தகம் பேசும் நம் கதைகள்’ என்ற தலைப் பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தமு எகச அவிநாசி  செயலாளர் தினகரன், பொரு ளாளர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் முத்து சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி ஈஸ்வர மூர்த்தி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகி வெங் கடாசலம், சுமங்கலி  பாலன், வழக்கறிஞர் விஜய் ஆனந்த், ஜோதிடர் சுப்பிரமணி உட் பட பலர் கலந்து கொண்டனர்.