பள்ளிபாளையம், பிப்.4- நிறைவேற்றப்படாமல் உள்ள கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நினை வூட்டும் வகையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதல்வருக்கு கடிதம் அனுப்பி வைத்தனர். ஆரூரான், அம்பிகா, தரணி உள்ளிட்ட ஏழு தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.500 கோடிக்கு மேலான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகள் ரூ.400 கோடி வரை விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கி இருப்பதால், அந்த பணத்தை கட்டச்சொல்லி வங்கி கள் நோட்டீஸ் அனுப்பி நெருக்கடி கொடுத்து வருகின்றன. பிரச்ச னைக்குரிய தனியார் கரும்பாலை களை அரசே ஏற்று நடத்த வேண்டும். 2013 முதல் 2017 வரை நான்கு ஆண்டுகாலமாக மாநில அரசு அறிவித்திருந்த, SAPப்படி ரூ.1217 கோடி பாக்கித்தொகை யை 24 தனியார் சர்க்கரை ஆலை களிடமிருந்து, அரசு நேரடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு திரும்ப பெற்றுத்தர வழிவகை செய்ய வேண்டும்.
கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். கரும்பு காட்டிற்கு தீ வைத்து வெட்டுவதை தடை செய்ய வேண்டும். தனியார் சர்க்கரை ஆலை களில் நடைபெறும் எடை மோசடி, ரொக்கவரி மோசடி ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். கரும்பு இன்சூரன்ஸ் திட்டத்தை ஆண்டு முழுவதும் பதிவு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப் பீட்டை உடனே வழங்க வேண்டும். கரும்பு விவசாயத்தை பாதுகாக்க, அனைத்து சர்க்கரை ஆலைக ளிலும் எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும். மேலும், தற்போது வரை நிறைவேற்றப் படாமல் உள்ள கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங் கப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நினைவூட்டும் வகையில், தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தினர் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் முதல் வருக்கு கடிதம் அனுப்பி வைத் தனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலை மட்ட தலைவர் முத்துச்சாமி தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் விவசாயி கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை தமிழ்நாடு முதல்வர் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியை சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சே. நல்லாகவுண்டர் துவக்கி வைத்தார். இதில், ஆலை மட்ட துணைத் தலைவர் செங்கோட்டையன், துணைச்செயலாளர் நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.