districts

img

அரசியலமைப்பு சட்டத்திற்கே சவால் விடும் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்துவோம்

பத்தாண்டு கால பாஜகவின் ஆட் சியில், இந்திய நாட்டின் பண்முக தண்மையை கேள்விக்குள்ளாக்கியுள் ளது. அரசியலமைப்பு சட்டத்தையே சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான் இந்திய சட்டங்களை மாற்றி  அமைப்பபதும், தனக்கு நாடாளுமன் றத்தில் எண்ணிக்கை அடிப்படையில் முழு பலம் உள்ளதால், புதிய புதிய சட் டங்களை கொண்டு வந்து ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நடைமுறைப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. இதன்தொடர்ச்சி தான் சிஏஏ, என்ஆர்சி, என்பிஏ சட்டங் கள். நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளை விக்கும் இந்த சட்டங்கள் என்ன சொல் கிறது. குடியுரிமைத் திருத்த சட்டத்தின் வாயிலாக மக்களிடத்தில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி, சமூகத்தில் மதங் கள் ஒவ்வென்றையும் தனித்தனி கூடா ரங்களாக மாற்ற ஆளும் ஒன்றிய மோடி அரசு முயற்சிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந் தியா முழுவதும் அமலுக்கு கொண்டு  வந்துள்ளது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ் தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந் தியாவுக்குள் வந்த, முஸ்லிம் அல் லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடி யேறிகளாக கருதப்பட மாட்டார்கள், மேலும் அவர்களுக்கு இந்திய குடியு ரிமை பெறவும் வழிவகை செய்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம். இது நாடுகடந்த நாட்களில் மிகப்பெரிய போர்க் களத்தில் ஒன்றாக உள்ளது. அதன் சிக்கல்கள்: 1. அனுமதிக்கான மட்டும் குடியுரிமை, சட்டம் குடியுரிமைகளை காப்பாற்ற அனுமதியின் மட்டுமே அளிக்கும் என்பது பெரிய கஷ்டம். இதன் மூலம், மக்கள் தமது உரிமைகளை உரிமையாளர்களாக மீறி செயல்பட முடியும். 2. மக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும்,

அதன்போது ஒரு விசாரணை அளிக்கப்பட முடியாது அல்லது மக்கள் தங்கள் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் அல்லது தடுக்கப்படும். குடியுரிமைகளை காப்பாற்றுவது  மிகப்பெரிய சமூக நலம் மற்றும் நீதி வெளிப்படுத்துவதற்கு முக்கியமானது. நுண்மையான அரசியல் என்ன? குடியுரிமை சட்டத்தின் மூலம் இந் திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என மிகத் தெளிவாக ஆளும்  மோடி அரசு கூறுகிறது. ஆனால் இச்சட் டத்தினால் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடு களிலிருந்து 2014. டிசம்பர் 31 ஆம்  தேதிக்கு முன்பாக எவ்வித ஆதாரங்க ளும் இல்லாமல் குடியேறியவர்களை மட்டுமே குறி வைப்பதற்கான நோக்கம் என்ன? ‘இசுலாமிய சிறுபான்மையினர் மட்டும் அகதி முகாம்களுக்கு அனுப்பப் படுவர், மற்ற சமூகத்தினர் கவலை கொள்ளத் தேவையில்லை என்பது தான் அது. இப்படிப்பட்ட சட்டத்தின் பின் னணியில் இந்தியாவிலுள்ள அனைத்து  மக்களுக்கும் சம உரிமை உண்டு என்று நாம் எந்த அடிப்படையில் கூற முடி யும்? இச்சட்டத்திற்கு பின்னாலுள்ள மறைமுகத் தாக்குதலாக என்னவெல் லாம் இருக்கிறது என்பது மிகத்தெளி வாக தெரிகிறது. இந்த சட்டத்தில் உள்ள குழப்பங்கள் என்னென்ன? இந்த சட்டம் நம் அரசியலமைப்பின் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தைப் போன்ற தீவிரமான போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டிய நேரம் இது. இவையாவும் நமது அரசியல மைப்பின் அடிப்படைகளை உடைப்ப தற்கான பாஜக அரசு செய்யும் முதல் முயற்சி கிடையாது. நமது அரசிய லமைப்பின் அடிப்படைக் கொள்கை களையே கொடூரமாக நசுக்கத் துடிக் கின்றன. ‘இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதகங்கள், இந்திய குடிமக்களுக்குப் பொருந்தாது,

அவர்களைப் பாதிக்காது’ என்பது ஒரு சந்தேகத்திற்குரிய மற்றும் ஆபத் தான வாதமாகும். இந்தியா ஒரு மதச் சார்பற்ற மற்றும் ஜனநாயக தேசமாக அதன் அரசியலமைப்பால் கட்டாயப் படுத்தப்பட்டு உள்ளது. அதன் எல்லை யில் உள்ள அனைத்து மக்களையும் அதன் சொந்த குடிமக்களாக மட்டு மல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே வேறு பாட்டை ஏற்படுத்தும் சட்டம் எதுவும், சட்டத்திற்குட்பட்டதாக இருக்க முடி யாது. ‘மத வேறுபாடுகள் வெளிநாட்டவ ருக்கு மட்டுமே. இந்தியாவிற்குள் வரும் அகதிகளுக்கே பொருந்தும். நம் குடி மக்களுக்கு அவையாவும் பொருந் தாது’ என்று பாஜகவினர் வலியுறுத்து கின்றனர். இந்திய எல்லைக்குள் நுழைந்தவு டன் அனைவரும் இந்திய அரசிய லமைப்பின் 14 ஆவது சட்டப்பிரிவு வழங் கும், அனைவருக்கும். சமஉரிமை அளிக்கப்பட்ட வேண்டும் என்கிற சட்ட விதிகளின் வரையறைக்குள் வந்துவிடு கின்றனர். இல்லையா? அதனால்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தொடர்ந்து நாம் ஏன் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்? இது ஒரு அரசியல் பிரச்சனை மட்டுமே அல்ல. மாறாக, நமது அரசியலமைப்பிற்கு ஒரு அடிப் படைக் கட்டமைப்பு உள்ளது. அதை  மாற்ற முடியாது. ஏனெனில் அடிப்படை  உரிமைகள் தவிர்க்க முடியாதவை அல் லவா. வானவில்லின் அழகிய நிறங்களை காவி நிறத்தை மட்டும் பூசி ஒரே வண் ணமாக்கி எண்ணத்தில் ஏற்ற முயற்சிக் கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கே  சவால் விடும் மோடி அரசை தூக்கி  எரிவதே இப்போது இந்திய வாக்காளர் கள் கையில் உள்ள பேராயுதம். -ஆசாத்