districts

img

இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றிப் பெற செய்வோம்!

நாமக்கல், மார்ச் 30- இந்தியா கூட்டணி சார்பில் நாமக் கல் மக்களவை தொகுதியில் போட்டியி டும் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வ ரனை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்புப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  எலச்சிபாளையம் ஒன்றிய அலுவல கத்தில், வெள்ளியன்று சிறப்புப் பேரவை கூட்டம், கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றியச் செயலாளர் தேவராஜ் வரவேற்றார். இக்கூட்டத்தில் நாமக் கல் நாடாளுமன்ற தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் போட்டியிடும்  கொமதேக வேட்பாளர் மாதேஸ்வ ரனை பெருவாரியான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிப் பெற வைப்பது, அதற்கு முழுமையாக பாடுபடுவது, தொடர்ந்து தீவிர தேர்தல் பரப்புரையை  மேற்கொள்வது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக, இக்கூட் டத்தில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா ளர் எம்.தங்கவேல், கொமதேக மத்திய  புறநகர் மாவட்டச் செயலாளர் பெரிய சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.