districts

img

போதை பழக்கத்தை கட்டுப்படுத்துவோம்: மாணவர்களுடன் கலந்துரையாடல்

கோவை, ஏப்.3- காவல் துறையுடன் கல்லூரி நிர்வாகம் இணைந்து மாணவர்களிடையே போதை பொருள் புழக்கத்தை கட்டுபடுத்தும் முயற்சி யின் ஒருபகுதியாக கலந்துரையாடல் நிகழ்வு  நடைபெற்றது.  கோவை மாவட்டத்தில் கல்லூரி மாண வர்களை போதை பொருள் பயன்பாட்டில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டம் STUDENTS ANTI DRUG AWARENESS CLUB  என்ற திட்டம். இத்திட்டத்தினை செயல்படுத் தும் விதமாக சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்களன்று, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை சரக காவல் துணைத் தலைவர் விஜயகுமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமை ஏற்றனர்.  இதில் டிஐஜி விஜயகுமார் பேசுகையில், கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்பின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கிடையே புழங் கும் போதைப் பொருள்களையும், விற்பவர் களையும் கட்டுப்படுத்த வருங்காலங்களில் மிகவும் கடினமான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கல்லூரி நிர்வாகம் மாணவர் களை வைத்து Anti Drug Awareness என்ற  வாட்ஸ் அப் குரூப் தொடங்கவும் அறிவு றுத்தினார். மாதம் ஒருமுறை காவலர்கள் மற் றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நல்லு றவு ஏற்படுத்தி போதை பொருள் உபயோ கத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொ டர்ந்து, எஸ்பி பத்ரிநாரயாணன் பேசுகை யில், கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கி டையே பெருமளவில் போதைப் பொருட்க ளுக்கு எதிராக  விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல் லூரிகளுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும், என்றார்.  முன்னதாக, போதைப்பொருள் உபயோ கத்தை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் வருங்காலம் பாதிக்காமல் இருக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த  கலந்துரையாடல் நடைபெற்றது. இதில்,  கோவை மாவட்டத்தில் உள்ள 100க்கும்  மேற் பட்ட கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி முதல் வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.